Friday, January 18, 2019

கைதிகள் மீதான தாக்குதலுக்கு, கடும் கண்டனம் - இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு.

அண்மையில் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் சிலர் தாக்கப்பட்டமைக்கு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு சென்ற மனித உரிமைகள் ஆணைக்குழு, இந்த தாக்குதலுக்கு இலங்கான கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என, சிறைச்சாலை தலைவரிடம் கோரிக்கைகளை முன்வைத்திருந்தது.

எனினும் இது குறித்த எந்தவிதமான முன்னேற்றகர நடவைடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு, அவ்வறிக்கைகளை விரைவில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com