Sunday, January 13, 2019

அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை - கல்வி அமைச்சு

தமிழர் திருநாளாகிய தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சகல அரச தமிழ்மொழி பாடசாலைகளுக்கும் நாளை திங்கட் கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாளை மறுதினம் தைப்பொங்கல் பண்டிகை தமிழர் பிரதேசங்கள் எங்கும் கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் மாணவர்களுக்கு தை பொங்கலுக்கு முதல் நாளான நாளை தினம் விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முன்னதாக வடக்கு மற்றும் ஊவா மாகாணத்திற்கு, இதே நாளில் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது நாட்டில் உள்ள அனைத்து அரச தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாளை வழங்கப்படும் விடுமுறைக்கு பதிலாக வேறொரு தினத்தில் பாடசாலை நடத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com