அமளி துமளிப்பட்ட நாடாளுமன்றம் - ஒரு நாள் விவாதத்தை கோரிய எதிர்க்கட்சி
அரசியல் அமைப்பு சபை நாளை கூடவுள்ள நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் பெரும் விவாதம் நடைபெற்றிருந்தது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய அரசியல் அமைப்பு சபை உருவாக்கம் தொடர்பிலான யோசனைகளை நாளை சமர்பிக்கவுள்ளார்.
இந்த நிலையில், இன்றைய நாடாளுமன்ற அமர்வில் விமல் வீரவன்ச, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, பிரதமர் ரணில் விக்கிரம சிங்க மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கிடையில் பெரும் விவாதம் நடைபெற்றது. இதுதவிர நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் பிரதமர் விசேட உரை ஒன்றையும் ஆற்றியிருந்தார். இதன்போது குறுக்கிட்ட விமல் வீரவன்ச மற்றும் பந்துல குணவர்தன ஆகியோர் ஒரு நாள் விவாதத்திற்கு வருமாறு கோரிக்கை விடுத்தனர்.
0 comments :
Post a Comment