Saturday, January 19, 2019

மனைவியை குத்திவிட்டு தன்னை தானே தீ மூட்டிக்கொண்ட இராணுவச் சிப்பாய்.

மாத்தறை கம்புறுப்பிட்டிய பிரதேசத்தில் தனது மனைவியை கூரிய ஆயுதம் ஒன்றால் குத்திவிட்டு தனக்குத் தானே தீ மூட்டிக்கொண்டுள்ளார் ஓய்வு பெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவர்.

42 வயதான குறித்த இராணுவச் சிப்பாய் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளதுடன், 37 வயதுடைய மனைவி ஆபத்தான நிலையில் கம்புறுப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரகசிய காதல் விவகாரம் ஒன்று தொடர்பான நீண்ட வாக்குவாதத்தின் பின்னர் இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரியவருகின்றது.

இன்று பகல் 1 மணிக்கு இடம்பெற்ற இச்சம்பவத்தில் குறித்த நபரின் குடியிருப்பின் 2ம் மாடி முற்றாக எரிந்து சேதமாகியுள்ளதுடன் ஸ்தலத்திற்கு விரைந்த மாத்தறை நகர சபையின் தீயணைப்பு படையினர் தீயினை கட்டுப்படுத்தியுள்ளனர்.

கம்புறப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com