Tuesday, January 8, 2019

விசேட நிபுணர்களின் வரைபு விரைவில் - எம்.ஏ. சுமந்திரன்.

புதிய அரசியலமைப்பு குறித்த விசேட நிபுணர்களின் வரைபு அறிக்கையை வெகுவிரைவில், அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடமொற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 7 ஆம் திகதியே, “புதிய அரசியலமைப்பு தொடர்பிலான நிபுணர்களின் அறிக்கையை, அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவிடம் சமர்ப்பிக்க தீர்மானித்திருந்ததாக தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், நாட்டில் திடீரென ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலைகளை அடுத்து மேற்படி அறிக்கையை சமர்ப்பிக்க முடியாது போனதாக குறிப்பிட்டார்.

இந்த நிலையில் தற்போது இந்த அறிக்கையை வெகுவிரைவில் அரசியல் அமைப்பு வழிநடத்தல் குழுவிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை தமது தரப்பு முன்னெடுத்து வருவதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டார்.

புதிய அரசியலமைப்பை கொண்டு வர கூடாது என்று கூறி, நாட்டின் பல அரசியல்வாதிகள், எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர். எனினும் அவர்களின் எதிர்ப்புக்களுக்காக, அரசியல்ப்பமைப்பு உருவாக்கத்தை நிறுத்தப் போவதில்லை என்று, எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com