Friday, January 11, 2019

கருத்துக்களை களவாடிய விமல் வீரவன்சவை ஒரு கோடி செலுத்த உத்தரவிட்டது நீதிமன்று

மக்கள் விடுதலை முன்னனியின் பிரதம செயலாளர் ரில்வான் சில்வாவிற்கு 10 மில்லியன் இழப்பீடு வழங்க வீரவன்சவிற்கு நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.

விமல் வீரவன்சவினால் வெளியிடப்பட்ட 'நத்த வெனுவட்ட அத்த' எனும் புத்தகத்தில் தனது கருத்துக்களை விமல் வீரவன்ச களவாடி பிரசுரித்துள்ளதாக ரில்வின் சில்வா தொடுத்த வழக்கினை விசாரணை செய்த கொழும்பு உயர் வணிப நீதிமன்று இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.

புலமைச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இவ் வழக்கானது கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக வணிக மேல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையிலேயே இத்தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழுவிற்கு தான் முன்வைத்த யோசனைகளையும் முன்மொழிவுகளையும் விமல் வீரவன்ச திருடி தனது கருத்துகளாக புத்தகத்தில் வெளியிட்டுள்ளதாக ரில்வின் சில்வா வழக்கு தாக்கல் செய்திருந்ததுடன், புத்தகத்திற்கான உரிமம் தனக்கு வழங்கப்படவேண்டும் என்றும் நஷ்ட ஈடாக 10 வழங்கப்படவேண்டும் என்றும் வழக்குச் செலவு தனக்கு வழங்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதன் அடிப்படையிலேயே தீர்ப்பில் நூலின் சொத்துரிமை ரில்வின் சில்வாவிற்கு உரிமையாக்கப்பட்டதோடு 10 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வழக்குச் செலவுகளை வழங்கவேண்டும் என்றும் வீரவங்சவிற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com