Saturday, January 19, 2019

மட்டக்களப்பில் பொட்டம்மான் 63 பேரை ஒன்றாக நிற்க வைத்து சுட்டார். வேட்கை

புலிகளமைப்பிலிருந்து கருணா பிரிந்து சென்றார். அதன் பின்னர் கருணாவை தேடியழிக்கும் நோக்கில் பிரபாகரனின் படையணி பாணு தலைமையில் கிழக்கிற்கு படையெடுத்தது. இப்படையெடுப்பின்போது வடக்குப்புலிகள் கிழக்குப்புலிகள் மீது அகோர தாக்குதல்களை மேற்கொண்டு மனித உரிமைகளை மீறியுள்ளதாக அத்தருணத்தில் கேள்விப்பட்டிருக்கின்றோம்.

அந்த கொடிய யுத்தத்தில் ஒரு முன்னணிப் போராளியாக இருந்த பிள்ளையான் எனப்படுகின்ற சிவநேசதுரை சந்திரகாந்தன், தமது தரப்பிலிருந்து வன்னிப்புலிகளிடம் சரணடைந்த தமது போராளிகள் 63 பேரை பொட்டு அம்மானின் உத்தரவின்படி நிற்கவைத்து சுட்டுக்கொன்றதாக „வேட்கை" என்ற தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

„இயக்க பிளவின்பின்னர் பிரிந்து சென்று பின்னர் மீண்டும் தம்மிடம் சரணடைந்த பலரை கொன்று குவித்தனர். எஞ்சிய பலரை கைதியாக்கியும் வைத்திருந்தனர். பொட்டம்மான் மட்டக்களப்புக்கு வந்து திரும்பும் போது அவர்களை துரோகிகள் என்று சுட்டுக்கொல்ல கட்டளை இட்டார். அதற்கிணங்க 63 பேரை ஒன்றாக நிற்க வைத்து சுட்டார்கள். இவ்வாறு எத்தனையோ பாவங்கள் நடந்தேறின.'

பக்கம் 95 இலிருந்து 98 வரை

எண்ணற்ற கடல் வளம், சுமார் பத்தாயிரம் சதுர கிலோ மீற்றர்கள் நிலப்பரப்பை கொண்ட இயற்கை வளங்கள் நிறைந்த பூமி, ஏரிகள். குளங்கள், ஆறுகள் என்று என்ன வளம் இங்கில்லை? ஆனால் ஏன் ஏழ்மை நிறைந்த மாகாணமாக நாம் இருக்கின்றோம்?

எமது உரிமைக்கான போராட்டம் யாருடனானது? எமது எதிரி யார்? என்பதிலெல்லாம் எமக்கு மென்மேலும் தெளிவுகள் தேவை. இவை பற்றிய தெளிவூட்டல்கள் அவசியம். எமது மாகாணத்தின் எதிர்கால பொருளாதார மீட்சிக்கு நாம் என்ன செய்ய போகின்றோம்? எத்தகைய வேலைத்திட்டங்களை நாம் வகுத்து கொண்டு முன்னேற வேண்டும்? என்கின்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை காணப்பட வேண்டும்.

இதற்காகத்தான் பல்துறை அறிவுகள் அவசியம். குறிப்பாக வரலாறு முக்கியமானதொன்றாகும். இந்த மண்ணில் வரலாற்றை தெரியாதவர்கள் இந்த மக்களோடு மக்களாக வாழாதவர்கள்இ எமது மக்களின் இன்ப துன்பங்களை அறியாதவர்கள் எமது அரசியலை தீர்மானிக்க முடியாது. இந்த மண்ணின் மைந்தர்கள்தான் இந்த மண்ணின் அரசியல் போக்கை தீர்மானிப்பவர்களாக இருக்கமுடியும்இ இருக்க வேண்டும். கிழக்கு மாகாணத்தின் அரசியல் பொருளாதார நலன்களை அடிப்படையாக கொண்டே எமது அரசியல் கொள்கைகளும் கோட்பாடுகளும்இ திட்டங்களும் வகுக்கப்பட வேண்டும்.

ஆனால் கடந்த காலங்களில் என்ன நடந்தது? கடந்த காலங்களில் ஏன் இங்கு சகோதர யுத்தம் மிக கொடியதாக இருந்தது? எமது சொந்த வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து அரங்கேற்றிய படுகொலைகள் மன்னிக்க முடியாதன. அதனை எமது சமூகம் மறந்து விடக்கூடாது.

போராட்ட இயக்கங்கள் முப்பதுக்கு மேல் இருந்தன. அதில் சிலவே மக்கள் மத்தியில் முன்னனியில் இருந்தன. அதிலும் எல்.ரி.ரி.ஈ அமைப்பு முன்னனி இயக்கமாகியது. அந்த அமைப்பு எப்படியும் ஈழத்தை பெற்றுத் தந்துவிடும் என நாமும் நம்பியிருந்ததுண்டு. ஆனால் அந்த அமைப்பே கிழக்கு மாகாணத்தை தனது சப்பாத்து கால்களுக்கு கீழ் வைத்திருக்க எண்ணியது.

தமிழ் இனத்தின் பெயரால் உருவாகி அரசியல் செய்து வந்த கட்சிகளுக்கு சுமார் நூறாண்டு கால வரலாறுண்டு. அது தமிழ் காங்கிரஸாக, தமிழரசு கட்சியாக, தமிழர் விடுதலை கூட்டணியாக, தமிழ் தேசிய கூட்டமைப்பாக தமிழ் மக்கள் பேரவையாக எந்த வடிவம் எடுத்தாலும் தலைமையில் மட்டும் எவ்வித மாற்றமும் வராது. தப்பித்தவறியும் கிழக்கில் இருந்து ஆமாம் சாமிகளைத்தவிர ஒரு தலைவரும் உருவாக முடியாது.

மேற்குறிப்பிட்ட முப்பதுக்கு மேற்பட்ட ஆயுதப்போராட்ட அமைப்புக்களில் ஒன்று கூட கிழக்கில் இருந்து உருவாகவில்லை. அதாவது கிழக்கு தலைமைகளை கொண்டிருக்கவில்லை. தமிழ் மக்களின் பெயரால் உருவான எல்லாவித கட்சிகளும் இயக்கங்களும் வடக்கிலே முளைவிட்டு கிளை பரப்பியவைதான். அனைத்துமே வடக்கு மேட்டுக்குடிகளின் கல்வி, மொழி பிரச்சனைகளில் இருந்து உருவானவைதான்.

ஆனால் 2004ஆம் ஆண்டு உருவாகிய புலிகள் இயக்கத்தின் பிளவுதான் அந்த வரலாற்றையும் எழுதாத விதியையும் மாற்றியமைத்தது.

புதிதாக உருவாகிய தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் மட்டுமே இந்த மண்ணின் மைந்தர்களால் உருவாக்கப்பட்டது.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் தலைவரது அழைப்பை ஏற்று வட பகுதி சென்று கிழக்கு மாகாண இளைஞர்கள் ஏராளமானோர் வீர மரணம் அடைந்தார்கள். 7000க்கு மேல் எவ்வளவோ இளைஞர்களையும் யுவதிகளையும் ஈன்று அனுப்பி விட்ட மண் எமது மண்.

வடபகுதி இளைஞர் யுவதிகள் லட்ஷ லட்ஷமாக நாட்டை விட்டு ஓடிச்செல்ல அந்த மண்ணை காத்தது கிழக்கு மாகாணத்து வீரர்கள் சிந்திய இரத்தமே ஆகும்.

இந்த நிலையில் இப்படையெடுப்பு சரியானதா?

எத்தகைய வரலாற்று தவறிது?

கிழக்கை உதாசீனம் செய்து விட்டு ஈழம் அல்லது அரசியல் தீர்வு சாத்தியமா என்பது பற்றி ஏன் பிரபாகரனால் சிந்திக்க முடியாது போனது? ஒரு முறைதானும் கிழக்கு மண்ணில் காலடி பட்டறியாத பல தளபதிகளை அனுப்பி எம்மீது கொலைகளை கட்டவிழ்த்து விடும் துணிச்சல் எப்படி வந்தது? எம்மை கேவலப்படுத்தி வெருகல் ஆற்றினை இரத்தத்தில் சிவக்க செய்த பாவச் செயலை எப்படி இந்த மண் மன்னிக்க முடியும்?

பிரபாகரனின் ஊடகங்களும் அரசியல் பிரிவும் துரோகிகள் என்றும் உள்வீட்டு விடயம் என்றும் கொலைகளுக்கு நியாயம் கற்பித்தார்கள். நோர்வே தலைமையிலான சமாதான செயலகம் பெட்டி படுக்கைகளுடன் கிழக்கிலிருந்து வெளியேறி விட்டதாக அறிக்கை விட்டிருந்தது. இந்த அநியாயத்தை பார்த்த அப்பாவி வாகரை மக்களும் இறந்த போராளிகளின் குடும்பங்களும் காயப்பட்ட போராளிகளும் வேறு வழியேதுமின்றி கூனிக்குறுகி இராணுவத்தினரிடம் சென்று நாங்கள் வீட்டுக்கு போக உதவுங்கள் என கெஞ்சினார்கள்.

அது இழிநிலையென்றால் அந்த இழிநிலைக்கு எம்மை தள்ளியது யார்? இதை என்னவென்று நியாயப்படுத்துவது?

மன்னிப்பது கடினமானது, மறப்பதோ முடியாதது.

இயக்க பிளவின்பின்னர் பிரிந்து சென்று பின்னர் மீண்டும் தம்மிடம் சரணடைந்த பலரை கொன்று குவித்தனர். எஞ்சிய பலரை கைதியாக்கியும் வைத்திருந்தனர். பொட்டம்மான் மட்டக்களப்புக்கு வந்து திரும்பும் போது அவர்களை துரோகிகள் என்று சுட்டுக்கொல்ல கட்டளை இட்டார். அதற்கிணங்க 63 பேரை ஒன்றாக நிற்க வைத்து சுட்டார்கள். இவ்வாறு எத்தனையோ பாவங்கள் நடந்தேறின.

அவர் வன்னி செல்லும் போது இங்கிருந்த போராளிகளிடம் கருணா இருந்த போது இருந்த நிலை இப்போது இல்லை. மக்களையும் போராளிகளையும் எம்மீது விசுவாசம் காட்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு இங்குள்ளவர்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றாராம்.

இதற்கு முன்னர் இந்த மட்டக்களப்பானுக்கு இப்படி உரைக்க வேண்டிய தேவை யாருக்கும் இருக்கவில்லை. கிழக்கு போராளிகளை இழந்த பின்னர் இவர்களெல்லாம் எப்படி வெற்று கோம்பைகளாக இருந்தார்கள் என்பதை நாமறிவோம்.

"ஓர் கூர் வாளின் நிழலில்" என்ற புத்தகத்தினை எழுதிய தமிழினி இறுதி போரின் கடைசி நாட்களில் பொட்டு அம்மானிடம் இருந்த கொஞ்ச மரியாதையையும் இழந்துவிட்ட சந்தர்ப்பத்தை அழகாக விபரித்திருந்தார்.

முக்கிய தளபதிகளுக்கான இறுதி கூட்டத்தில் "இனி எதுவும் அதிசயம் நடந்தாலே தவிர எனது கையில் ஒன்றுமில்லை" என்று கைவிரித்தாராம்.

அதே வேளை தமிழினி இறுதியில் எல்லாம் இழந்து ஆமியிடம் சரணடைந்த போது, "2004ஆம் ஆண்டில் துரோகிகளாக்கப்பட்டு இராணுவத்திடம் சரணடைந்த மட்டக்களப்பு போராளிகள் மனநிலை எப்படி இருந்திருக்குமோ அப்படியே எமக்கும் இருந்தது "என்று சொல்லியிருந்தார்.(ஓர் கூர் வாளின் நிழலில் பக்கம்-124,125)

ஆனால் ஒரு வித்தியாசம் சண்டையில் தோல்வி கண்டு வேறு வழியின்றி பொது எதிரியிடம் சரணடைந்தவர்கள் அல்ல நாம். எமது தலைவர்ககளால் அமைப்பால் துரத்தியடிக்கப்பட்டு பொது எதிரியிடம் சரணடைய வைக்கப்பட்டவர்கள் நாங்கள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com