Saturday, December 29, 2018

பொலிஸ் திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்தார் மைத்திரிபால சிறிசேன

புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டபோது, சட்டம் ஒழுங்கு அமைச்சை ஜனாதிபதியே வைத்திருப்பார் என பரவலாக பேசப்பட்டதுடன், இதுதொடர்பாக ரணில் மற்றும் மைத்திரிபால சிறிசேனவிற்கிடையே ஓர் முறுகல் நிலையும் உருவாகியிருந்தது. சட்டம் ஒழுங்கு அமைச்சு தன்னிடம் வழங்கப்படவேண்டும் என ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

இந்நிலையில் பொலிஸ் திணைக்களத்தை பாதுபாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்துள்ள ஜனாதிபதி அதற்கான வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிட்டுள்ளார். இவ்வறிவித்தலுடன் நாட்டில் சட்டம் ஒழுங்கு என்ற அமைச்சு தற்போது இல்லாமல் போயுள்ளது.

இதற்கு மேலதிகமாக ஊடகத்துறை சார்ந்த 21 நிறுவனங்கள் ஜனாதிபதியின கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அரச அச்சக திணைக்களம், பொலிஸ் திணைக்களம், தேசிய ஊடக மத்திய நிலையம், தேசிய மருந்துகள் கட்டுப்பாட்டு சபை ஆகியவைகள் அதற்குள் உள்ளடங்குகின்றது.

ஜனாதிபதியின் கீழ் செயற்படும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சுகளுக்கும் 21 நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

இதேநேரம் இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி சேவை, லேக்ஹவுஸ் நிறுவனம் மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆகிய அரச ஊடகங்கள் நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

அத்துடன் புதிய அமைச்சரவையின் அமைச்சர்களின் பணிகள், அவர்களுக்கான திணைக்களங்களை உறுதி செய்யும் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நிர்வகிக்கப்படுகின்ற தேசிய கொள்கை, பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு, வட மாகாண அபிவிருத்தி, தொழில்சார் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சிற்கு 24 நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com