Sunday, December 30, 2018

மஹிந்தவை மறந்த சுதந்திரக் கட்சி... குமார வெல்கம, எதிர்கட்சித் தலைவராக வேண்டும் என கடிதம்...

எதிர்க்கட்சி தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை நியமிக்குமாறு, ஸ்ரீ சுதந்திரக்கட்சியின் பாதுகாப்பு இயக்கம் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியது.

நாட்டில் தற்போது எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து, பெரும் போட்டியும், குழப்பகரமான சூழலும் உருவாகியுள்ள நிலையில், மேற்படி கடிதம் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்ஸ, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் அங்கத்துவம் பெற்றமை, குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் திலங்க வீரகோன் தெரிவித்தார்.

கடந்த தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். பிற்பட்ட காலத்தில் ஏற்பட்ட சில அரசியல் பிணக்குகள் காரணமாக மஹிந்த ராஜபக்ஸ, சிறிலங்கா சுதந்திர கட்சியில் இருந்து வெளியேறி, பொதுஜன பெரமுனாவுடன் இணைத்து கொண்டதாக ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளியாகின.

தற்போது மஹிந்த ராஜபக்ஸ தமக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படவேண்டும் என கூறிக்கொண்டிருக்கின்றார். இந்த சூழ்ச்சிக்கு நாம் ஒருபோது துணைபோக மாட்டோம் என, சுதந்திர கட்சியின் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் திலங்க வீரகோன் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com