Saturday, December 22, 2018

அசர ஊடகங்களின் ஊழியர்களில் கை வைக்க வேண்டாம்! மங்களவிற்கு மைத்திரி அறிவுறுத்தல்.

புதிய அமைச்சு பதவியேற்றதன் பின்னர் அரச ஊடகங்களின் பிரதானிகள் மற்றும் ஊழியர்களை இடமாற்றுதல் மற்றும் புதிய நியமனங்களை வழங்குதல் போன்ற நிகழ்வுகள் ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் அரச ஊடகங்களின் பதவிகளை எக்காரணம் கொண்டும் மாற்றியமைக்க வேண்டாம் என நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர விற்கு ஜனாதிபதி கூறியுள்ளார்.

அமைச்சருக்கு தொலைப்பேசி அழைப்பை ஏற்படுத்தி இதுவரை எந்த அமைச்சுக்கும் உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தல் எதுவும் இல்லாத நிலையில் புதிய நியமனங்களை வழங்கவே பதவியில் இருந்து விலக்கவோ வேண்டாம் என கூறியுள்ளார்.

லேக்கவுஸ் நிறுவனத்திற்கு புதிய தலைவரை நியமித்தமை தொடர்பாக ஏற்பட்டுள்ள சி;க்கலின் பின்னரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சுக்களின் வர்த்தமானி அறிவித்தலின் போது லேக்கவுஸ் நிறுவனம் மற்றும் தேசிய ரூபவாஹிணி கூட்டுத்தாபனம் ஆகியவற்றை ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்படும் என தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com