Sunday, December 30, 2018

புலிகள் ஜனநாயக செயற்பாடுகளுக்கு தடை விதித்திருந்தனர். போட்டுடைக்கின்றார் சுமந்திரன்.

தமது கட்சியின் வருகைக்கு முன்னர், தமிழ் அரசியல் கட்சிகள் ஜனநாயகத்துடன் அரசியல் சார் முன்னெடுப்புக்களை மேற்கொள்ளவதற்கு, விடுதலை புலிகள் இயக்கம் தடை விதித்ததாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

நேற்றைய தினம் தனதில்லத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, 'எம்.ஏ' இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்க காலப்பகுதியில் தாம் கட்சியில் இருந்ததில்லை என்று கூறிய அவர், விடுதலை புலிகளுடன் கூட்டமைப்பு ஏதேனும் ரகசிய உடன்படிக்கை செய்திருக்குமா? என்பது தொடர்பான அறிவு, தமக்கு இல்லை என்றும் சந்தேகமான கருத்துக்களை வெளியிட்டார்.

கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முற்பட்ட காலப்பகுதியில், ஜனநாயக நகர்வுகளை நோக்கி பயணித்த சில தமிழ் அரசியல் கட்சியினர், விடுதலை புலிகளால் படுகொலை செய்யப்பட்டதாக, சுமந்திரன் பகிரங்க வாக்குமூலம் அளித்துள்ளார்.

இப்படுகொலைகள் அரங்கேறிய காலகட்டத்தில், நோர்வே முதலான நாடுகள் விடுதலை புலிகளுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டன. தமிழ் அரசியல் கட்சிகளுடன் சுமூகமான நிலைப்பாட்டை கொண்டு, ஜனநாயகத்திற்கு தடை விதிக்காமல் இருந்தாலே, சர்வதேச நாடுகள் விடுதலை புலிகளுடனான பேச்சுவார்த்தைக்கு இணக்கம் தெரிவிக்கும் என, மேற்படி நாடுகள் விடுதலை புலிகளுக்கு ஆலோசனை வழங்கின.

இந்த ஆலோசனைகளின் பிரகாரம், தமிழ் அரசியல் கட்சிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த ஜனநாயக தடை சற்று தளர்த்தப்பட்டது. அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் பிரவேசத்தின் பின்னரே, புலிகளினதும், தமிழ் அரசியல் கட்சிகளினதும் தேவைப்பாடுகள் குறித்த சிந்தனைகள் உதித்தன. இதன் செயல் வடிவமாக, ஜனநாயக ரீதியில் அரசியல் செய்வதைக்கான அனுமதி விடுதலை புலிகளால் வழங்கப்பட்டதாக, எம்.ஏ. சுமந்திரன் கூறினார்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com