Thursday, December 27, 2018

சிறிதரனுக்காக மக்கள் பிரதிநிதியை சிறையிலடைத்த பிரதேச செயலர். துணைபோகின்றது கிளிநொச்சி பொலிஸ்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்கள் நீரினால் மூழ்கி மக்கள் இன்னல்படுகின்றனர் என்பது யாவரும் அறிந்த விடயம். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணிகளை மேற்கொண்டுவந்த கண்டாவளை பிரதேச சபைக்கான மக்கள் பிரதிநிதி ஒருவரை இன்று கிளிநொச்சி பொலிஸ் சிறையிலடைத்துள்ளது.


கண்டாவளை பிரதேச சபைக்கான மக்கள் பிரதிநிதியாக கடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அசோக்குமார். பிரித்தானியாவிலிருந்து நாடு திருப்பியுள்ள அசோக்குமார் கண்டாவளை பிரதேசத்தில் இயங்கும் கமக்காரர் அமைப்பிற்கு தலைவராக உள்ளதுடன் இவர் அம்மக்களுடன் இதயபூர்வமாக நெருங்கிப்பழகியதன் விளைவாக அவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் தேர்தலில் நின்றபோது, சிறிதரனின் எதிர்ப்பிரச்சாரங்களை மீறி பிரதேச மக்கள் அவரை தேர்ந்தெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கண்டாவளை பிரதேசத்தில் வெள்ளம் பெருக்கெடுத்தபோது, அம்மக்களை பாதுகாப்பான இடமொன்றுக்கு கொண்டு சென்று அவர்களை பராமரிக்கும் பாரிய பொறுப்பினை கமக்காரர் சங்க உறுப்பினர்களுடன் இணைந்து முன்னெடுத்தார் அசோக்குமார். அத்துடன் பிரதேசத்திலிருந்து புலம்பெயர்ந்துள்ள மக்களை உடனடியாக தொடர்பு கொண்டு அவர்களிடமிருந்தும் உதவிகளை பெற்றுக்கொண்டார். அவரது மேற்படி ஒருங்கிணைப்பு மற்றும் சமூகப்பணி சிறிதரனின் வயிற்றில் புளியை கரைத்து ஊற்றியது.

ஏற்கனவே இலங்கைநெட் குறிப்பிட்டதுபோல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோர் தன்னூடாகவே அதை செய்யவேண்டும் என்றதோர் காட்டுச்சட்டத்தை உருவாக்கி கிளிநொச்சியில் மக்களை ஏமாற்றும் வித்தையை மேற்கொள்கின்றார் சிறிதரன். ஆனால் சிறிதரனின் இந்த ஏமாற்று வித்தை அசோக்குமாரிடம் வேலை செய்வதில்லை. அவர் அங்கு சுயாதீனமாக இயங்கி வந்தார். அசோக்குமார் மக்களுக்கு நேரடியாக உதவி செய்ததும், புலம்பெயர் மக்கள் அசோக்குமாரிடம் நேரடியாக உதவிகளை அள்ளி வழங்கியதும் சிறிதரனுக்கு பேரிடியாக அமைந்தது.

கண்டாவளை பிரதேச செயலாளரை ஏவி விட்டார் சிறிதரன். தெருச்சண்டியன் பாணியில் அசோக்குமாரினால் நிர்வகிக்கப்பட்ட முகாமிற்குள் நுழைந்த பிரதேச செயலர் அநாகரிகமாக நடந்து கொண்டார். அவர் அவ்வாறு நடந்ததற்கான காரணம், அசோக்குமாரை கள்ளனாக்கவேண்டும் என சிறிதன் போட்டுக்கொடுத்த திட்டம்.

நிரபராதியான அசோக்குமார் நிலைமைகளை எடுத்துரைத்தார், ஆனாலும் அசோக்குமாரை சிக்கலில் மாட்டவேண்டும் என்ற சிறிதரனின் நிகழ்சி நிரலில் செயற்பட்ட கண்டாவளை பிரதேச செயலர் பிருந்தாகரன், தனது கடமைக்கு இடையூறு செய்ததாக பொலிஸில் முறையிட்டார்.

தமிழ் மக்களிடம் போலி உணர்சி பேசுகின்ற சிறிதரனுக்கும் இலங்கை பாதுபாப்பு படையினருக்கும் உள்ள உறவு யாவரும் அறிந்தது. அந்த அடிப்படையில் அசோக்குமாரை கைது செய்த கிளிநொச்சி பொலிஸ் நீதிமன்று விடுமுறையிலுள்ளபோது நீதிபதியின் வாசஸ்தலத்தில் அசோக்குமாரை ஆஜர்படுத்தி விளக்க மறியலுக்கு அனுப்பியுள்ளனர்.

இவ்விடயத்தில் அரசியல்வாதியின் ஏவலாளியாக செயற்பட்டுள்ள கண்டாவளை பிரதேச செயலாளர் பிருந்தாகரன், தனது அதிகாரத்தையும் உண்மைக்கும் நேர்மைக்கும் மாறாக துஷ்பிரயோகம் செய்துள்ளார். இவ்விடயத்தில் பிரதேச செயலரின் முறைப்பாட்டை நடுநிலைமையுடன் விசாரணை செய்யாது, சாட்சியங்களுக்கு செவிமடுக்காது பொலிஸாரும் செயற்பட்டுள்ளனர்.

பிரதேச செயலரின் இச்செயற்பாடு தொடர்பான பூரண விசாரணை ஒன்றுக்கு மக்கள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் முறையிட்டு இவ்வாறான அதிகார துஷ்பிரயோகங்கள் நிறுத்தப்படுவதற்கு உழைக்கவேண்டும். மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் ஊழியர்கள் அதிகார மமதையில், நாட்டிலுள்ள சட்டங்களை தங்களுக்கு தேவையானவாறு துஷ்பிரயோகம் செய்து மக்களை சிக்கலில் தள்ளுகின்றனர். இக்கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமானால் இவ்விடத்திலிருந்தே ஆரம்பிக்கப்படவேண்டும்.

சிறிதரனுக்கும் அசோக்குமாருக்குமிடையேயான பிணக்கு தொடர்பாக கூறுவதானால், கண்டாவளை பிரதேச சபை தேர்தலில் போட்டியிட்டபோது, அசோக் குமார் தொடர்பாக விசமப்பிரச்சாரங்களை மேற்கொண்டார் சிறிதரன்.

இப்பிரச்சாரங்களுக்கு பதிலளிக்கும் வகையில்,

'நான் போராட்டம் என்று சென்று கிளுவை மரத்தில் துப்பாக்கியை தொங்கவிட்டு ஓடிவந்தவன் அல்ல'

'நான் எனது மனைவி மீது சந்தேகப்பட்டு என்னை எனது மைத்துனன் தீபன் துப்பாக்கியை தலையில் வைத்து மிரட்டவில்லை'


என சிறிதரனின் வண்டவாளங்களை கண்டாவளை எங்கும் பிரசுரம் ஒட்டியவர் அசோக்குமார். சிறிதரனின் நெருங்கிய உறவினரான அசோக்குமாருக்கு சிறிதரனின் உள்வீட்டு விவகாரங்கள் அத்தனையும் அத்துப்படி.

இதுதான் சிறிதரனுக்கும் அசோக்குமாருக்குமிடையேயுள்ள பிணக்கு. இதை உணராத பிருந்தாகரன் தவறாக செயற்பட்டுள்ளார். எனவே தனது தவறை உணர்ந்து முறைப்பாட்டை வாபஸ் பெற்று யாவருக்கும் பொதுவான அரச உத்தியோகித்தராக செயற்படவேண்டும் என மக்கள் வேண்டுகின்றனர்.

அசோக்குமாரின் செயற்பாடு தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ முகாம்களில் தங்கியுள்ள இளைஞர்கள் இவ்வாறு கூறுகின்றனர்.








0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com