Monday, December 24, 2018

இடுப்பில் சலங்கை கட்டி (அது) செய்யும் உடையார் கூட்டம்

வன்னியெங்கும் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலைகாரணமாக மக்கள் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் இன்னோரன்ன தேவைகளை வேண்டி நிற்கின்றனர். இந்த அவலநிலையிலும் தனக்கு புகழ் தேடும் இழிசெயலில் இறங்கியுள்ளான் கிளிநொச்சி மாவட்ட எம்பி சிறிதரன்.

ஓ**தாராம் உடையார் இடுப்பில் சலங்கை கட்டி என்ன நாட்டுப்புற பேச்சுநடையை ஒட்டிய சம்பவம் ஒன்றை இலங்கைநெட் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றது.

வட மாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சிவஞானம் தனது ஒருமாத சம்பளத்தினை வெள்ளத்தினான் பாதிக்கப்பட்ட மக்களுக்கென சிறிதரனிடம் வழங்கியுள்ளார் என படத்துடன் செய்தியொன்று செத்தவீட்டு இணையத்தில் பிரசுரமாகியிருந்தது.



நாம் இங்கு கேட்கும் கேள்வியாதெனின் வட மாகாண அவைத்தலைவராகவிருந்த சிவிகே சிவஞானத்திற்கு பாதிக்கப்பட்ட மக்கள் எங்கே தங்கவைக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் அவர்களை நிர்வகிக்கும் நிர்வாகத்தினர் யார் என்பதும் தெரியாதா? நேரடியாக அம்மக்களை நிர்வகிக்கின்ற நிர்வாகத்தினரிடம் அவ்வுதவியை வழங்காது சிவஞானம் இப்பணத்தினை சிறிதரனிடம் வழங்கியதன் நோக்கம் என்ன?

மக்களின் இன்னல்களை வைத்து தங்களது வாக்கு வங்கியை தக்கவைக்கும் செயற்பாட்டை நிறுத்துவீர் என அரசியல்வாதிகளை இலங்கைநெட் வேண்டுகின்றது.

அத்துடன் வன்னியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகளை செய்ய செல்கின்ற நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் அவற்றை தனக்கூடாக செய்யவேண்டும் என்று சிறிதரன் ஓர் மறைமுக மிரட்டலை விடுத்துவருவதாகவும் அவ்வாறு தமது உழைப்பில் சிறிதரன் குளிர்காய்வதை விரும்பாதவர்கள் உதவி செய்யும் நோக்கத்தையே கைவிட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இதனால் மக்களுக்கு கிடைக்கக்கூடிய உதவிகள் குறையும் நிலைதோன்றியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com