Sunday, December 30, 2018

பாடசாலை அதிபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை....

பாடசாலை அதிபர்கள் சிலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களின் சீருடைக்காக வழங்கப்படும் வவுச்சர்களை பாடசாலை அதிபர்கள் சிலர், விற்பனைக்காக பயன்படுத்துவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக அவர் கூறினார்.

இந்த சம்பவங்கள் நாடு முழுவதும் தற்போது பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இந்த குற்றங்களுடன் தொடர்புரைய பாடசாலை அதிபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

இந்த விடயம் சம்மந்தமாக கல்வி அமைச்சர், உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com