Sunday, December 14, 2014

புலி நாட்டிலோ காட்டிலோ இல்லை! வெளிநாட்டில் இருக்கின்றது! என மஹிந்த கூறுகையில் குப்பையை கிளறுகின்றது ஜேவிபி.

புலிகளியக்கத்தை தாம் நாட்டிலும் காட்டிலும் இல்லாதொழித்துள்ளபோதும் அவ்வியக்கம் வெளிநாட்டில் பலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச. ஜனாதிபதித்தேர்தலுக்கான தனது முதலாவது பிரச்சாரக்கூட்டம் அனுராதபுரத்தில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் வெளிநாட்டு புலிகளால் நாட்டிற்கு அச்சுறுத்தல் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் வெளிநாட்டு புலிகள் பலர் மஹிந்தவுடன் பல்வேறு ஒப்பந்தங்களுடன் மறைமுகமாகவும் நேரடியாகவும் ஒத்துழைத்து வருவகின்றனர் என ஜேவிபி எனப்படுகின்ற மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சுமத்துகின்றது.

வெளிநாட்டு புலிகள் பல்வேறு வழிகளின் மஹிந்த குடும்பத்தின் வியாபார பங்குதாரிகளாக மாறியுள்ளனர் என்றும் அவர்களே வெளிநாடுகளில் மஹிந்தவிற்கு எதிரான போரட்டங்களை மேற்கொண்டு பௌத்த சிங்கள வாக்குகளை மஹிந்த அபகரிப்பதற்கு உதவுகின்றனர் என்றும் தெரிவிக்கின்றது.

மஹிந்த ஆட்சியிலிருந்து இறக்கப்பட்டால் புலிகளின் நடவடிக்கைளுக்கு அது சாதகமாக அமையும் என சிங்கள மக்கள் மத்தியில் மேற்கொள்ளும் பிரச்சாரத்தை ஜேவிபி தவிடு பொடியாக்கியுள்ளது.

மஹிந்தவை புலிகளே ஆட்சியில் அமர்த்தினார்கள் என்றும் , மஹிந்தவை ஆட்சியில் அமர வைப்பதற்கு புலிகளின் ஆதரவை பெறுவதற்காக அவ்வமைப்புடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சூரியாராச்சி எவ்வாறு பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டது, எவ்வாறு பணம் செலுத்தப்பட்டது என்ற உண்மைகளை பாராளுமன்றில் தெரிவித்திருந்தார். அதன் கானொளிக்காட்சிகளை தற்போது ஜேவிபி வெளியிட்டுள்ளது.

பாராளுமன்றில் பேசிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சூரியாராட்சி, புலிகளுடனான பேச்சுவார்த்தையில் பசில் ராஜபச்சவுடன் தானும் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவும் பல தடவைகள் கலந்து கொண்டதாகவும் முதற்கட்டமாக 200 கோடி பணத்தை வழங்கியதாகவும் பின்னர் 1000 ற்கு மேற்பட்ட கோடிகளை அமைச்சரவை அங்கீகாரத்துடன் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com