Monday, May 5, 2014

இராணுவ வீர்ர்களுக்கு கைக்குண்டுத் தாக்குதல் நடாத்திய நால்வர் கைது!

காலி எல்பிட்டிய, தொலஹிதகல, பட்டுவஹேன பிரதேச வீடொன்றில் இரவு நேரம் நடந்த நிகழ்வொன்றின்போது வீசப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில், சந்தேகத்தின்பேரில் பொலிஸாரினால் நால்வர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்ற 2 ஆம் திகதி நடைபெற்ற இத்தாக்குதலில் இராணுவ வீர்ர்கள் ஐவர் உட்பட மற்றும் ஐவர் காயத்திற்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

தாக்குதலுக்குள்ளாகியுள்ள இராணுவ வீர்ர்கள் மூவரும் இராணுவத்தில் ஒன்றாக சேவையாற்றியவர்கள் ஆவர்.

தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள அடுத்த இருவரும் காலி குருந்துகஹ எல்பிட்டியவில் வசித்து வருபவர்கள் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

தனிப்பட்ட குரோதம் காரணமாக இந்த்த் தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இக் கைக் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டதன் பிறகு, மேலதிக சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதல் தொடர்பில் எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com