Wednesday, May 7, 2014

அளுத்கமவிலும் 2 புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன - 6 பேரின் பணி இடைநிறுத்தம்!

காலியிலிருந்து பயணித்த எண்ணெய் கொண்டு செல்லும் புகையிரம் ஒன்று, அளுத்கம புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரததுடன் மோதியத னால், அதிகாரிகள் அறுவரின் பணி இடைநிறுத்தப் பட்டுள்ளது. இவ்வாறு இரு புகையிரதங்களும் ஒன்றுடன் ஒன்று மோதியதனால், புகையிரத சாரதி மற்றும் உதவியாளர் காயத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

இரு புகையிரதங்களிலும் பயணிகள் இல்லாதிருந்ததால், இருவர் மாத்திரமே காயத்திற்குள்ளாகியுள்ளனர்.

இதன் காரணமாக கடலை அண்டிய புகையிரதப் பாதையில் தாமதம் ஏற்பட்டது என அறிய வருகின்றது.

தற்போது இரு புகையிரதங்களும் சுமுக நிலைக்குள்ளாகி உள்ளன.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com