Sunday, April 27, 2014

ஆசிரியையின் அசமந்த போக்கிற்கு கன்னத்தில் அறைந்தனர் பொலிஸார்!


சப்பாத்துக்கள் இரண்டு எடுக்கப் பணம் இல்லாமையால் செருப்புக்கள் இரண்டினை அணிந்து சென்ற வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு வருகை தந்த மாணவியின் கழுத்தில் செருப்புக்களை கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளது.

இவ்விடயம் பற்றி அறிந்த சேருநுவர பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.பீ. வீர்ரத்ன பொலிஸ் செலவில் குறித்த மாணவிக்கு இரண்டு சப்பாத்துக்களை வழங்கியுள்ளார்.

தந்தையும் இல்லாத இந்த மாணவியை மனிதாபிமானமற்ற முறையில் நடாத்தியுள்ள திருகோணமலை பாடசாலையொன்றின் வகுப்புப் பொறுப்பாசிரியைக்கும் பிள்ளைகள் இருப்பதாக ஊரார் கூறுகின்றனர்.

பாடசாலையின் ஒழுக்காற்றை நிலைநிறுத்துவதற்காக இவ்வாறு செய்துள்ளதாக, பாடசாலை அதிபர் பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.

பொலிஸாரிடமிருந்து இரண்டு சப்பாத்துக்களையும் பெற்றுக் கொண்டுள்ள மாணவியின் தாய், பிள்ளையின் நலன் கருதி தொடர்ந்து நாங்கள் இதுவிடயமாக மேலதிகமாக ஒன்றும் செய்யமாட்டோம் என பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com