Thursday, December 19, 2013

குழந்தைகள் மீது நேசம் காட்டும் தெற்காசிய நாடுகள் மத்தியில் அதிக மதிப்பெண் பெற்ற இலங்கை!

குழந்தைகள் மீது நேசம் காட்டும் தெற்காசிய அரசாங்கங்கள் தெடர்பான ஆய்வில் இலங்கைக்கு மிக உயர்ந்த குறியீட்டு மதிப்பெண் பெற்றுள்ளது.இது தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அமைப்பு மற்றும் குழந்தைகள் உரிமைகள் மையம் என்பன வெளியிட்டுள்ள அறிக்கையை சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தார்.

இது தொடர்பில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் ஜயசேன, பிரதி அமைச்சர்கள் பண்டு பண்டாரநாயக்க, ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா, சுதர்ஷின் பெர்னாண்டோபுள்ளே மற்றும் சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com