Wednesday, October 16, 2013

எல்.ரி.ரி.ஈ க்கு நிதி சேகரித்த இருவர் சுவிசில் இருந்து நாடுகடத்தல்

எல்.ரி.ரி.ஈ க்கு நிதி சேகரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு தமிழ் குடியேற்றவாசிகளை நாடு கடத்தியுள்ளதாக சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. தங்களது அடையாளத்தை நிரூபிக்க முடியாதிருந்த அவர்களை கொழும்பு பண்டாரநாயக்கா பன்னாட்டு வானூர்தி நிலை யத்தை வந்தடைந்தவுடன் பொலிஸ் கைது செய்துள்ளது.

ஏற்க மறுக்கப்பட்ட இலங்கை குடியேற்றவாசிகளை தங்களது நாட்டுக்குள் மீளவும் அனுமதிப்பதில்லை என்ற தீர்மானத்தை சுவிட்சர்லாந்து அரசு எடுத்துள்ளது. அவர்கள் 2011 ல் சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டார்கள். நீதி மன்றத்தில் நிறுத்திய பின்னர், நீதி மன்ற கட்டளைப்படி அவர்கள் நாடுகடத்தப்பட்டார்கள்.

1 comment:

  1. Very good News.
    Please send all the garbage to back home.
    Thank you Swiss government

    ReplyDelete