சந்திரனில் தண்ணீர் துகள்கள்!
சந்திரனில் தண்ணீர் துகள்கள் உருவாகுவதற்கான சாத்திய கூறுகள் குறித்து அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழக மண்ணியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். கடந்த 1970ம் ஆண்டுகளில் சந்திரனில் இருந்து எடுத்து வரப்பட்ட மண் மற்றும் பாறைகளை பேராசிரியர் அல்பெர்டோ சால் தலைமையிலான குழுவினர் ஆராய்ச்சி செய்தனர்.
அதில் கடந்த 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியும், சந்திரனும் ஒன்றுக்கொன்று மோதின. அப்போது பூமியில் இருந்த தண்ணீர் மற்றும் அதன் துகள்கள் சந்திரனுக்கு இடம் மாறியிருக்க வேண்டும்.
பூமியின் எரிமலைகளில் இருக்கும் ‘ஒலிவின்’ என்ற துகள்கள் சந்திரனில் இருந்து எடுத்து வரப்பட்ட மண்ணில் உள்ளன.
கடந்த 2011ம் ஆண்டு நடத்திய ஆய்வில் பூமியில் உள்ள எரிமலையின் குழம்பு துகள்களும் கூட சந்திரனின் மண்ணில் காணப்படுகின்றன என்பது தெரியவந்துள்ளது.
இவை தவிர ஹைட்ரஜனின் ‘டியட்டோரியம்’ என்ற ஐசோடோப் சந்திரனில் உள்ள மண்ணில் உள்ளது. இது பூமியின் மண்ணில் உள்ளது போன்றே காணப்படுகின்றன.
எனவே சந்திரன் மீது பூமி மிக கடுமையாக மோதியதில் தண்ணீர் இடமாறி அங்கு தண்ணீர் துகள் உருவாகி இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment