Friday, March 8, 2013

பொது பல சேனா பொலிஸ் மாதிரி நடிக்கத் துள்ள வேண்டாம்! -கெஹலிய

உத்தியோகப் பற்றற்ற பொலிஸாராக பொது பல சேனா இயக்கம் சட்டத்தைக் கைக்கு எடுத்தால் உத்தியோக பூர்வமான பொலிஸாரைக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடக அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

தற்போதும் அவ்வியக்க உறுப்பினர்கள் பொலிஸார் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்வதற்கு முயன்றுகொண்டிருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. அதனால் சட்டத்தைக் காக்கவும், சமாதானத்தை ஏற்படுத்தவும் அரச பொலிஸாரை சட்டரீதியாகப் பயன்படுத்துவதற்கு வேண்டியேற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிலவும் ஒற்றுமைக்கும் ஐக்கியத்துக்கும் பாதிப்பேற்படும் வண்ணம் செயற்பட்டால், அதற்கெதிராக முடிவு எடுக்க வேண்டியேற்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com