Wednesday, August 29, 2012

பாடசாலைகளை அடிப்படையாக கொண்ட தொழில்பயிற்சி திட்டங்களை அமுல்படுத்த திட்டம்

பாடசாலைகளை அடிப்படையாக கொண்ட தொழில்பயிற்சி திட்டங்களை அடுத்த வருடம் அமுல்படுத்துவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ள தாகவும், கல்வி அமைச்சு மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சும் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மொஹான் லால் கிரேரு தெரிவித்துள்ளார்.

அம்பாறை, இளைஞர் பயிற்சி நிலையத்தின் நிர்மாண பணிகளை ஆரம்பித்த வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

105 மில்லியன் ரூபா இதற்காக செலவிடப்படவுள்ளது. அத்துடன் அம்பாறை நிப்புனதா பியச நிலையமும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. சிரேஷ்ட அமைச்சர் பி.தயாரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, தேசிய இளைஞர் சேவை மன்ற தலைவர் லிலித் பியும் பெரேரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com