இலங்கைநெற் செய்திகளை நாளாந்தம் பெறவேண்டுமா? ஒரு Like மாத்திரம்.

Want This Blogger Widget? Click Here!

Monday, July 16, 2012

அரைவாசி, கால்வாசி உடுக்கும் பெண்களால்தான் பலாத்காரம் செய்ய தோன்றுகிறதாம் -மேர்வின்

அரைவாசி, கால்வாசி அரைகுறையாக உடையணிந்து பெண்கள் வீதியில் செல்லும் போதுதான், பலாத்காரம் செய்ய தோன்றுகிறது என மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு ரிதீதென்ன பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், முஸ்லிம் பெண்கள் தலையை மூடிக்கொண்டும், முகத்தை மூடிக்கொண்டும் இருக்கின்றனர் இதனால் ஆண்களுக்கு ஆசை ஏற்படுவதில்லை என தெரிவித்துள்ளார்.

ஆனால் எமது பெண்களை எடுத்துக் கொண்டால், உடைகள் கட்டையாக அணிகின்றனர், அல்லது கை, கழுத்து இல்லாமல் அணிகின்றனர். வெளியில் தெரிய கூடாதவற்றை வெளியே காட்டிக் கொண்டு திரிகின்றனர். பௌத்தனாக இருந்தாலும்,காண்பிக்க கூடாதவற்றை காட்டும் போது அவற்றை யார் பார்க்காமல் இருப்பது? யார பலாத்காரம் செய்யத் தூண்டுவது? அந்த அரைவாசி, கால்வாசி உடுத்திச் செல்லும் பெண்கள் தான் என மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com