Tuesday, January 31, 2012

தடைசெய்யப்பட்ட கடற்றொழில்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

தடைசெய்யப்பட்ட கடற்றொழில்களை யாழ்ப்பாணத்தில் முற்றாக கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு வடபகுதி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் பிரதி நிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய இழுவைப்படகுகளும் உள்ளுர் இழுவைப்படகுகளும் கடல் வளங்களை முற்றாக அழிப்பதாக தெரிவித்துள்ள இவர்கள் இழுவைப்படகுகளால் கடற்றொழில் உபகரணங்களும் சேதமாக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக வெடி வைத்தல் தங்கு ஊசி வலை உள்ளிட்ட உபகரணங்களை இன்னமும் கடற்றொழிலாளர்கள் பாவனை செய்து வருவதாகத் தெரிவித்துள்ள இவர்கள் இதனை முற்றாக கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கடந்த சில கிழமைகளுக்கு முன்னர் கொழும்பிலிருந்து யாழ்.வந்த கடற்றொழில் நீரியல் வளத்துறைத்திணைக்கள விசேட குழவினர் சட்டவிரோத கடற்றொழில் முறைகளை பாவித்து கடற்றொழிலில் ஈடுபட்டவர்களை கைது செய்து நீதிமன்றில் நிறுத்தியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.








0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com