Tuesday, January 31, 2012

கதிர்காமம் ஹோட்டலில் தற்கொலை அங்கி மீட்பு.


கதிர்காமம் பகுதியில் தற்கொலை தாக்குதல் அங்கியொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கதிர்காமத்தில் விடுதியொன்றில், சந்தேகத்திற்கிடமான தற்கொலை அங்கியொன்று காணப்படுவதாக, பொலிஸ் நிலையத்திற்கு இன்று காலை கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பொன்றை அடுத்து கதிர்காம பொலிஸார், மேற்கொண்டு பரிசோதனையின்போது, தற்கொலை குண்டுதாரிகள் அணியும் அங்கியொன்றை கண்டெடுத்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அங்கி, இவ்விடத்திற்கு எவ்வாறு கொண்டுவரப்பட்டது? மற்றும் இதனுடைய நோக்கம் தொடர்பாக அறிந்து கொள்ளும்பொருட்டு கதிர்காமம் பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் சந்தேக நபர்களை தேடும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ள பொலிஸார் அதனை அண்டிய பகுதிகளில் உள்ளவர்களிடமிருந்து தகவல்களை பெற்றுவருவததாகவும் தெரிவித்துள்ளார்.

குண்டு செயலிழக்கச் செய்யும் குழுவினர் அவ்விடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

ஓய்வு விடுதியொன்றிலேயே, இந்த அங்கி காணப்பட்டதாக, அறிவிக்கப்படுகிறது. 

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com