Tuesday, January 31, 2012

சட்டவிரோத கருக்கலைப்பு! இரு வைத்தியர்கள் இருபெண்கள் கைது.

குருநாகல் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் கருக்கலைப்பில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட  வைத்தியர்கள் இருவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெல்லவப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெல்லவ பானகமுவ பிரதேசத்தில் வீடொன்றில் நடத்தி வந்த சட்டவிரோதக் கருக்கலைப்பு நிலையத்தினைச் சுற்றிவளைப்பு மேற்கொண்ட போது கருக்கலைப்பிற்காக வருகை தந்திருந்த இரு பெண்களுடன் வைத்தியர்கள் எனக் கூறப்படும் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸாருக்கு நபர் ஒருவர் வழங்கிய தகவலை அடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குருநாகல் பிரதேச வைத்தியரின் ஊடாக இந்த கருக்கலைப்பு மத்திய நிலையத்திற்கு தேவையான பெண்கள் வருவதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுப்பதாகவும், கருக்கலைப்பு நிலையத்தை நடத்திச் சென்ற வீட்டுக்கார இளைஞனும் மற்றும் கருக்கலைப்பிற்காக வருகை தந்திருந்த இரு வைத்திய அதிகாரிகளும் ஒன்றிணைந்து இந்தக் சட்டவிரோத நிலையத்தினை நாடாத்தி வந்துள்ளமை பொலி;ஸ் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் இருவரில் ஒருவர் கலைப்புச் செய்யப்பட்டவர் எனவும் மற்றையவர் அதற்குத் தயார் நிலையில் இருந்தவர் எனவும் பொலிஸர் தெரிவிக்கின்றனர்,

கருக்லைப்பிற்காகப் பயன்படுத்தக் கூடிய உபகரணங்கள் மற்றும்  போக்குரத்திற்காகப் பயன்படுத்திய முச்சக்கர வண்டி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள பெண்களில் ஒருவர் கலகெதர பிரதேசத்தையும் மற்றையவர் மெல்சிரிபுரு பிரதேசத்தையும் வதியிடமாகக் கொண்டவர்கள் எனவும் இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com