Friday, October 16, 2009

ஜனாதிபதி தேர்தலுக்காக பசில் ராஜபக்க்ஷ இராஜினாமா செய்கின்றார்.

ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் திரு. பசில் ராஜபக்ச தனது நியமன எம்பி பதவியை ராஜினிமா செய்யவுள்ளமை உறிதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த திரு. பசில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபடுவதற்காக தான் இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கான உத்தியோக பூர்வ அறிவிப்பை எதிர்வரும் 20ம் திகதி பாராளுமன்ற அமர்வின் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com