Friday, July 31, 2009

சம்பந்தனுக்கோர் அன்பு மடல். பாங்கொக்கில் இருந்து ஜெயக்குமார்

கனம் மதிப்புக்குரிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்
தலைவர் திரு. இரா.சம்பந்தன் அவர்களுக்கு,


தாங்கள் கிழக்குமாகாணத்தை பிரதிநிதபபடுத்துவர் என்பதாலும் நானும் கிழக்கு மாகாணத்தில் பிறந்த ஒரு பழைய போராளி என்பதாலும் இந்த சிறுமடலை எழுதிகின்றேன். சிந்திக்க வைப்பதற்காகத் தான் எழுதிகின்றேன். மன்னித்துவிடுங்கள் என்று நிச்சயமாகக் கேட்க மாட்டேன். ...

உங்களைபோல் எனக்கு இந்த அரசியல் சித்த விளையாட்டு எல்லாம் தெரியாது.
ஓ..ம் நமோ நாராயணாயா 'கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது'
அதனால்தான் இன்றும் அகதி வாழ்க்கை.

தாங்கள் பி.பி.சி தமிழோசைசையில் கொடுத்த செவ்வி கேட்டு எங்கள் செவிப்பாறைகள் எல்லாம் குளிர்ந்தது. காரணம் புலிகள் இன்று இல்லை புலிகள் அழிக்கப்பட்டு விட்டதாகக் கூறுகின்றீர்கள. ஆனாலும் தங்களை நம்ப முடியாது. தங்களின் அரசியல் நாடமாகக்கூட இருக்கலாம். இப்படித்தான் இத்தனை காலா காலங்களாக தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் நடத்துகின்றீர்கள் இதுவும் இந்த தேர்தலில் வெல்லுவதற்குத்தனா? என்ற ஒரு பயமும் உள்ளது.

புலிகளோ தாங்கள் ஓர் நாடுகடந்த உத்தேச தமிழ் அரசை அமைக்கப் போவதாகவும், புலிகள் பீனிக்ஸ் போல எழும் என்றும் கூறுகின்றார்கள். நீங்களோ புலிகள் இன்று இல்லை புலிகள் அழிந்துவிட்டார்கள் என்று கூறுகின்றீர்கள். சம்பந்தன் நீங்கள் கவுண்டமணி பாணியில் காமடி ஏதும் பண்ண வில்லையே? பாதிக்கப்பட்ட உள்ளம் பதை பதைகின்றது. காரணம் உள்ளது பிரபாகரன் நன்றாகவும், பாதுகாப்பாகவும் உள்ளார் என்ற உறுதியான செய்தி கிடைத்து இருக்கிறது'' என்று நேற்று பெங்களூர் கருத்தரங்கில் பங்குகொண்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவரும், உலகத் தமிழர் பேரவையின் தலைவருமான பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

தமிழ் மக்களை இன்னும் நிம்மதியாக வாழவிடமாட்டார்களா? பழ.நெடுமாறன் குண்டை போடுகின்றார் உங்கள் உறவுகள் தமிழகத்தின் வல்டி மைனர்கள்'. தங்களின் மதிப்புக்குரிய பாசிசப்புலிகளால் எனது சொந்த நாட்டில் வாழமுடியாமல் இன்னும் ஒரு நாட்டில் வாழ்கின்றேன். நாடு திரும்பலாம் என்ற ஒரு நப்பாசைதான். தங்களை நம்ப முடியாது என்பதற்கு பல காரணங்கள் உள்ளது.

கடந்த கால உங்கள் அரசியல் வாழ்க்கை. அவர் அவர் இருந்த இடத்தை வைத்துத்தான் மதிப்பு. தமிழ் தேசியத்தலைவர் அமிர்தலிங்கம் அய்யா பாசிசப்புலிகளால் கொலை செய்யப்பட்ட பொழுது தெரிந்தும் தெரியாமல் இருந்தது..

அப்போதய ஜனாதிபதி சந்திரிகா அம்மையாருடன் இணைந்து தமிழ் மக்களுக்குக்கு தீர்வு திட்டத்தை முன் வைப்பதகாகக்கூறி சந்திரிக்கா அம்மையாருடன் விசுவாசமாக இருப்பதாகக்காட்டி குண்டு துளைக்காத காரைப்பெற்ற பின் பல்டி அடித்தது.

பாசிசக்கொலைக்கு அரசியல் அங்கிகாரம் புலிகள் அழியும் வரையில் பெற்றுக்கொடுத்தது.

வீரகேசரி இணையம் 1.25.2009 11:38:59 ல் 'எமக்குப் பிரபாகரனோ, தமிழீழ விடுதலைப் புலிகளோ முக்கியமல்ல. எம்மைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பியவர்கள் தமிழ் மக்கள். நாம் அவர்களின் நலனுக்காவே குரல் கொடுக்கிறோம்' என்றும் பல்டி அடித்தது.

புலிகளே ஏக பிரதிநிதிகள் புலிகளுடன் பேசித்தான் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை தர முடியும் என்று புலிகள் அழிக்கப்படும் வரையில் பறக்காத நாடுகள் எல்லாம் பறந்து பறந்து பார்த்ததும.; புலிகள் முற்றாக இல்லை என்றதும் தங்களின் தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் பேசித்தான் ஒரு தீர்வு திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் என்று தாங்கள் இன்று கூறுவதும் முற்றிலும் வேடிக்கை.

ஏன் நீங்கள் புலிகள் இருந்த பொழுது பிரபாகரன் எங்களுக்கு முக்கியம் அல்ல என்று கூறவில்லை?
எனக்கு ஒரு நீண்ட நாள் சந்தேகம் தேசியக்கூட்டமைப்பு என்றால் என்ன?
இது ஜனநாயகத்தை அவமதிக்கும் கூட்டமைப்புத்தானே?

நான் உண்மையில் படித்தது குறைவு இடித்தது சிவன்கோவில். நீங்கள் சட்டம் படித்தவர் அரசியலில் உள்ள நெளிவு சுழிவுகள் எல்லாம் புரிந்தவர். நீங்கள் இதன் தலைவர் என்றபடியால். தமிழ் தேசியம் என்றால் எனது கணக்கு இதுதான்.
இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை அமைத்தவர்கள் புலிகள்.
அவர்கள் பாசிசத்தை மதிப்பவர்கள்.
ஜனநாயகம் அவர்களுக்கு சுத்த ஞான சுனியம்.

அப்படியானால் புலிகள் இல்லாதபோது இந்தத் தமிழ் தேசியகூட்டமைப்பு கலைக்கப்பட்டு நீங்கள் முதலில் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சியில் இணைவது சாலச்சிறந்தது என நான் நினைக்கின்றேன்.

புலிகள் இல்லாதபோது ஆண்டவன்தான் உங்களை காப்பாற்ற வேண்டும். புலிகள் இருந்தபொழுதும் புலிகள் இல்லாதபொழுதும் சரி தமிழ் மக்களுக்கு யாரும் ஏக பிரதிநிதிகள் அல்ல.

புலிகளால் பறிக்கப்பட்ட ஜனாயகம் தமிழ் மக்களுக்கு மீண்டும் கிடைக்கவேண்டும்.
அவர்கள் அவர்களின் வாழ்விடங்களில் வாழவேண்டும். அப்போதுதான் தமிழ் மக்கள் சுயமாக சிந்தித்து முடிவு எடுப்பார்கள். ஜனநாயகவழியில் தமிழ் மக்கள் யாரை தெரிவு செய்கின்றார்களோ அவர்கள்தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகள்.

வயித்துப் பசிக்கு சோறு கேட்கும் மக்களுக்கு தீர்வு ஒன்றும் சோறு தராது. மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். அதுதான் மக்களின் இன்றைய தேவை.
கடந்தவார பி.பி.சி தமிழோசையில் ஒரு பெரிய அப்படமான பொய்யைக் கூறினீர்கள். மூன்று லட்சம் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு சென்று மக்களை பார்வையிட்டீர்களா? எனக் கேட்கப்பட்ட சர்ச்சைக்குரிய கேள்விக்கு தங்களின் பதில் நியாயம் அற்றது.

தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு முகாம்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறுகின்றீர்கள் அப்படியானால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான யாழ்ப்பான மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் பார்த்துவிட்டு அழுது கண்ணீர் வடித்தது எல்லாம் என்ன உங்கள் நாடகத்தில் ஒரங்கமா ?

எஸ்.விநோகாராதலிங்கம், சிவநாதன் கிஷோர் இவர்கள் யார்? இவர்களும் தேசிய கூட்டமைப்புதானே? முகாங்களுக்கு சென்று கண்ணீர் வடிப்பதால் என்ன பலன்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினர் செய்கின்ற உதவிகளைக்கூட உங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பால் செய்யமுடிவில்லை. சரி அவர் ஒரு அமைச்சர் செய்கின்றார் என நீங்கள் கூறலாம்.

அப்படியானால் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உறுப்பினர்கள் சாப்பாட்டு பார்சல் தயார் செய்து கொடுக்கின்றார்கள். உங்காளால் தவிக்கும் உள்ளங்களுக்கு தண்ணீர கூடக்கொடுக்கமுடியவில்லையா?

அதில் வேடிக்கை என்னவென்றால் தாங்கள் தமிழ் மக்களுக்காக நீண்டகாலமாகப் போராடியதாக் கூறுவது. புலிகளுடன் சேர்ந்து போராடியதின் பலன் மூன்று லட்சம் மக்களை முகாங்களுக்குள் வாட வழிவகுத்ததுதான் உண்மை.
அப்படியானால் புலிகள் அழிக்கப்பட்டால் புலிகளால் அமைக்கப்பட்டு, தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தைத் தவறான தடத்தில் வழிநடத்தியதில் பங்காளியான தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு இந்த தேர்தலில் என்னவேலை?

தமிழர்களுக்கு அழிவை ஏற்படுத்தியவர்கள் வெளிப்படையான குற்றவாளிகள் என்றால், அதைத் தடுக்க வழிகள் இருந்தும் அதைத் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களும் மறைமுகமான குற்றவாளிகளே!.

எனவே தமிழ்பேசும் மக்கள் இத்தேர்தலில் சரியான முடிவுகளை எடுப்பார்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இனியும் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது காரணம் தமிழர்கள் முப்பது வருடங்களாக பட்ட துன்பங்களில் இருந்து பாடம் கற்றுக் கொண்டுவிட்டார்கள். எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்கள் உங்களுக்கு நல்ல பாடம் கற்பிப்பார்கள் அரசியலை மக்கள் புரிந்து கொண்டுவிட்டார்கள்.

நன்றி
அன்புடன் அ.ஜெயக்குமார் (சோதி)

Read more...

புலிக்கேணல் கருணாவின் முடிவின் ஆரம்பம். பீமன்

சொற்கேளாப் பிள்ளையால் குலத்திற்கீனம்.
துர்ப்புற்ற மந்திரியால் அரசிற்கீனம்.


பாரபட்சத்திற்கு எதிரான தமிழ் மக்களின் உரிமைப்போர் ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தபோது அப்போராட்டத்தினை பிரபாகரன்-கருணா கும்பல் தமிழ் மக்களை ஆழும் ஆயுதமாக பயன்படுத்த முற்பட்டதுடன், மனித குலத்திற்கு எதிரான செயற்பாடுகளில் இறங்கியமையின் வடுக்களை தமிழ் மக்கள் மட்டுமல்ல இலங்கையர் அனைவரும் சுமந்து கொண்டிருக்கின்றனர்.

தமிழரசுக் கட்சி முதல் புலிகள் வரையான சகல தமிழ் கட்சிகளாலும் தமிழ் மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள் என்பது வரலாறு. சூடுகண்ட பூனை அடுப்பங்கரை நாடாது என்பதுபோல், இனிவரும் காலங்களில் மேற்படி வழித்தோன்றல்களான அரசியல் கட்சிகளையும், பிரபாகரன் அழிக்கப்பட்டுள்ள நிலையில் பிரபாகரன் திருநாமம் காப்பதற்கு ஜனநாயகப் போர்வை போர்த்துள்ள பிரபாவின் வாரிசான கருணாவினையும் மக்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

தமிழ் மக்கள் துஸ்டனைக் கண்டால் தூரவிலகிப் பழகியவர்கள். எனவே கருணா எனும் துஸ்டன் நிற்கும் பக்கம் கூட மக்கள் தலைவைத்து படுக்க விரும்பமாட்டார்கள் என்பதையும், பாமரத் தமிழ் மக்கள் முதல் அரசியல் ஞானம் படைத்தோர் வரை கருணா இணைந்திருக்கும் கட்சியுடன் இணைந்து செயற்படவோ அக்கட்சிக்கு ஆதரவு வழங்கவோ முற்படமாட்டார்கள் என்பதும் அரசியல் என்னவென்று தெரியாத சிறுகுழந்தைக்கு கூட புரியும் நிலையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி கருணாவை கட்சியினுள் வைத்துக்கொள்ள முற்படுவதானது அக்கட்சியின் படுதோல்விக்கு வித்திடலாம் எனப் பலரும் கூறுகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் இருந்து 7000 இற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் போரில் உயிர்நீத்துள்ளனர். ஏனவே அக்குடும்பங்களைச் சேர்ந்தோர் கருணாவை ஆதரிக்கக்கூடும் என ஜனாதிபதி மஹிந்தவும் அவர் அரசும் கருதாலாம். ஆனால் அது முற்றிலும் தவறான கருதுகோள். மேற்படி 7000ம் போராளிகளில் இரு தரப்பு. அதில் ஒருதரப்பு கருணாவின் வஞ்சகமான ஆசைவார்த்தைகளை நம்பி, தமிழீழம் எனும் மாயையில் மயங்கி (கிழக்கு மாகாணத்தில் அந்த மாயயை உருவாக்கிய முழுப்பொறுப்பும் கருணாவினுடையது) தமிழீழம் காணச் சென்றோர். மறுதரப்பு கருணாவினால் கட்டாயமாக பிடித்துச் செல்லப்பட்டோர். இதில் கட்டாயமாக பிடித்துச் சென்று உயிர் நீத்துள்ள இளைஞர் யுவதிகளின் பெற்றோர் எந்தக்காலக்கட்டத்திலும் கருணாவை மன்னிக்கப்போவதில்லை. மற்றய தரப்பும் கருணாவின் இன்றைய நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

இவற்றிற்கு அப்பால் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு சாதாரண வாழ்வு வருகின்றது என சந்தோசப்பட்டாலும் சிவபூசையினுள் கரடி ஒன்று புகுந்துள்ளதே என்ற ஏக்கத்துடனேயே பொதுமக்கள் வாழ்கின்றனர். யார் இந்த கரடி?

இலங்கை அரசின் அரசநிர்வாகத்தை குழப்பி அரச அதிகாரிகளை தனது வக்கிரத்தினுள் அடக்கி வைத்திருந்த கருணா என்கின்ற கரடி இன்று அரச யந்திரத்தினுள் புகுந்து நிற்கின்றது. புலிக்கேணல் கருணா இலங்கை அரச நிர்வாகத்திலிருந்த தனது கட்டனைகளுக்கு கட்டுப்பட மறுத்த அல்லது தயக்கம் காட்டிய எத்தனை தமிழ் அரச அதிகாரிகளைக் கொன்று குவித்திருக்கின்றார் என்று அரச தரப்பினர் கிழக்கல் உள்ள ஒவ்வொரு கிராம் கிராமமாகச் சென்று வினவினால் கருணாவிற்கு மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய செல்வாக்கை அறிந்து கொள்ளமுடியும்.

இவற்றை ஆழமாக சிந்தித்துப் பார்க்காத ஐனாதிபதி மஹிந்தா, ஏதோ புலிகளை தோற்கடிப்பதற்கு கிழக்கின் இளைஞர்கள் உதவினார்கள் எனக் கருதி அவ்விளைஞர்களின் ஒத்துழைப்புக்கு நன்றிக்கடனாக முரளிதரனுக்கு இத்தனை பதவிகளையும் வழங்கினார் என்பதை மறந்தவிட்ட கருணா, எந்த இளைஞர்களின் முதுகில் சவாரி செய்து வந்தாரோ அந்த இளைஞர்களை எட்டி உதைத்துள்ளார் என்பதை ஜனாதிபதி அறிந்திருக்க வாய்ப்பில்லை.

கிழக்கு மக்களின் அபிவிருத்திக்காகவும் நல்வாழ்விற்காகவும் அரசினால் வழங்கப்பட்ட வளங்கள் பதவிகள் யாவும், கருணாவின் சுய இன்பத்திற்காக பயன்படுத்தப்படுகின்றது. கிழக்கிலங்கையில் அபிவிருத்தி என ஆரம்பிக்கப்பட்ட சில முன்னெடுப்புக்கள் கருணாவின் பிரத்தியேகச் செயலாளரின் தங்கை கணவனுக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளாதாக கருணாவுடன் இருக்கின்ற இளைஞர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

புலிகளில் இருந்து வெளியேறி வந்த கிழக்கு இளைஞர்களில் 225 க்கும் அதிகமானோர் புலிகளுடனான யுத்தத்திலும் புலிகளால் நயவஞ்சகமாகவும் கொல்லப்பட்டுள்ளதுடன், அவர்களை வாழ்வாதாரமாக நம்பியிருந்த மக்கள் சுயதொழில் ஒன்றிற்கு எதாவது உதவி கிடைக்குமா என ஏங்கி நிற்கும் நிலையில் கிழக்கிற்கான பியர் முகவர், கிழக்கில் பிடிக்கின்ற மீன்களுக்கான மொத்த முகவர், சீனி மொத்த முகவர் ஆகிய மூன்றும் மேற்குறிப்பிட்டுள்ள நபருக்கே வழங்கப்பட்டுள்ளது.

இவ்விடயத்தில் கருணாவின் முக்கிய பொறுப்பாளர்களாக இருந்த இளைஞர்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், அவை தமது கைகளுக்கு வழங்கப்பட்டிருந்தால் தம்முடன் இருந்து மரணித்துப் போன தமது சகாக்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கி அவர்களின் நல்வாழ்விற்கு உதவியிருக்க முடியும் என மிகவும் ஆத்திரமடைந்த பலர் இது தொடர்பாக கருணாவிடம் நேரடியாகவே வாதிட்டும் உள்ளனர்.

ஆனால் கருணாவின் இச்செயற்பாடுகளுக்கு கருணாவின் பின்னால் நிற்கும் மிகவும் குறுகிய சிந்தனை கொண்ட ஒருசிலர் துணைபோவதாக கூறப்படுகின்றது. இவ்வாறு கருணாவின் செயல்களுக்கு துணைபோவோர் தமது சுயலாபங்களுக்காக கருணாவின் அழிவையோ அன்றில் எம் தேசத்து மக்களின் துயரத்தையோ கண்டு கொள்ளாது கருணாவை தவறான பாதையில் பயணிக்க விட்டு தாமும் லாபம் அடைந்து கொள்கின்றனர்.

கருணாவின் இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாக மக்கள் மத்தியில் கருணா யார்? கருணாவிற்கு தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பங்கு என்ன? என்கின்ற கேள்விகள் எழுகின்றன. கருணா சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப்பட்டியல் எம்பி எனும் பட்டத்தை தனதாக்கி கொண்டதற்காக கருணா தமிழ் மக்களின் பிரதிநிதி ஆகிவிடமுடியாது.

காரணம் கருணா இதுவரை எந்த தேர்தலையும் சந்திக்கவில்லை. அவ்வாறு சந்தித்தாராக இருந்தால் மக்கள் அவரைத் தேர்ந்தெடுப்பார்களா என்பது ஐனநாயக, மனிதாபிமான, அரசியல் பின்னணி, கல்வியறிவு, சமூகவேவை, நிர்வாகத்திறன் என்கின்ற அளவுமானிகளால் அளந்து அறிந்து கொள்ள முடியாத விடயம். ஆக தேர்தல் காலங்களில் அரச இயந்திரம் எவ்வாறு இயங்குகின்றது. மக்கள் எவ்வாறு கருணாவின் ஆயுதத்திற்கு பயந்த நிலையில் காணப்படுகின்றார்கள், எத்தனைபேர் கருணாவிற்கு கள்ள வாக்கு திணிப்பதற்கு விசுவாசமாக இருக்கின்றார்கள் என்பதை வைத்தே அனுமானிக்க முடியும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் என்ன காரணத்திற்காக கருணாவிற்கு பதவிகளை வழங்கியுள்ளது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டிய தேவை கருணாவின் செயற்பாடுகளினூடாக எழுந்தள்ளது. காரணம் கருணா தனக்கு கிடைத்துள்ள பதவியானது தனது ஆயதப் போராட்டத் திறமைக்காக, அதாவது அரந்தலாவயில் பௌத்த பிக்குகளைக் கொன்றும், சரணடைந்த 600 மேற்பட்ட பொஸாரை நிராயுதபாணிகளாக்கி தர்மத்திற்கு அப்பால் கொலை செய்தும், முஸ்லிம் பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டோரைக் கொன்றும், ஜெயசிக்குறு படைநகர்வின் போது ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளை பலி கொடுத்து அதே எண்ணிக்கையான படைவீரர்களை கொன்றும் நிரந்தர அங்கவீனர்களாக்கியும் பிரபாகரனது கரத்தை பலப்படுத்தியதற்காக இப்பதவி வழங்கப்பட்டதா? அன்றில் தமிழ் மக்களுக்காக வழங்கப்பட்டதா? அவ்வாறு தமிழ் மக்களுக்காக வழங்கப்பட்டிருந்தால் அது எந்த தமிழ் மக்களின் விருப்புடன் வழங்கப்பட்டதென்பதையும் தெரியப்படுத்த வேண்டும்.

இக்கேள்வி இங்கு முன்வைக்கப்படுவதற்கான காரணம் யாதெனின், புலி மாஸ்ரர்களான ஜோர்ஜ், மனோ ஆகியோரை இலங்கை அரசு அரசியலினுள் உள்வாங்கப்போகின்றது எனவும், அவர்களுக்கு சிலவேளைகளில் வட மாகாண மக்களைப் பிரதிநிதிதுவப் படுத்துகின்ற ஏதாவது பதவிகள் வழங்கப்படலாம் எனவும் செய்திகள் வெளியாகியிருந்தபோது, அச்செய்தியை பகிரங்கமாக மறுதலித்த புலிக்கேணல் கருணா ஜோர்ஜ், தயா மாஸ்ரர்கள் எந்தக்காலகட்டத்திலும் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபடாதவர்கள் அவர்களுக்கு எந்தப்பதவியும் கொடுக்கப்படலாகாது என ஊடகங்களுடாக தெரிவித்திருந்தார்.

அவரது இச்கூற்றானது, தமிழ் மக்களுக்கு கூறும் செய்தியாதெனில், மக்கள் என்னை தேர்தலில் தேர்ந்தெடுத்தாலும் இல்லாவிட்டாலும் நான் இலங்கையில் நாடாத்திய பயங்கரவாத போருக்காக எனக்கு அமைச்சுப் பதவியும் பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் மஹிந்த அரசினால் வழங்கப்படும் அப்போது நான் உங்களை நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஆள்வேன் என்பதாகும்.

கருணாவிற்கும் கருணாவின் சகாக்களுக்கும் தமது பிளவினால்தான் புலிகளை தோற்கடிக்க முடிந்தது என்ற ஓர் இறுமாப்பு உண்டு, ஆனால் அன்று இவர்கள் முகம்கொடுத்த இராணுவ நடவடிக்கைள் மற்றும் இராணுவத் தலைமைகள், அதன் வழிகாட்டிகளுக்கும், இன்றைய இராணுவ ஒழுங்கமைப்பிற்கும் அதன் தலைமைக்கும் இடையில் பாரிய இடைவெளி உண்டென்பதையும் கருணா தரப்பினர் இன்றுள்ள இராணுவத் தலைமையை களத்தில் எதிர்கொண்டிருந்தால் பிரபாகரனுக்கு ஏற்பட்ட அதே கதி இவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும் என்பதையும் அவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

அதே நேரம் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதற்கு கருணாவின் பிளவே காரணம் என்ற எண்ணம் பிற்போக்குத் தனமான தன்னம்பிக்கை இல்லாத சில பெரும்பாண்மையின அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் காணப்படுகின்றது. இங்கு கருணாவின் பிளவு எனும் விடயத்தை நன்கு அவதானிக்க வேண்டும். கருணா எந்ந ஓர் காலகட்டத்திலும் பிரபாகரனை விட்டு வெளியேறுவதற்கும் தென்னிலங்கையுடன் கைகோர்த்து நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் எண்ணம் கொண்டிருக்கவில்லை. கருணாவின் பதவி மோகமும் உள்மோசடி விவகாரங்களும் கருணாவின் உயிருக்கு ஆபத்தாக வந்தபோது இலங்கை அரசிடம் கருணா உயிர்பிச்சை பெற்றுக்கொண்டாரே தவிர இன்று சிலரால் கூறப்படுவது போல் அவராக விரும்பி வன்செயலை கைவிடவில்லை.

கருணா ஜெயசிக்குறு கட்டளைத் தளபதியாக இருந்தபோது, நீ இப்போரில் வெல்வாயானால் உனக்கு தமிழீழ இராணுவத் தளபதி பதவியைத் தருவேன் என பிரபாகரன் வாக்குறுதி அளித்திருந்தார். அப்பதவியை இலக்காக கொண்டு கிழக்கின் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொடுத்து ஜெயசிக்குறுவை வென்ற கருணா தமிழீழ இராணுவத் தளபதி பதவிக்காக பிரபாகரனிடம் சென்ற போது அவருக்காக வெற்றுப் பேப்பர் காத்திருந்தது.
அங்கே பல சர்ச்சைகள் கிளம்பியது. கருணா கிழக்கு திருப்பினார். (அவையாவற்றையும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் விபரமாக வெளியிடக்காத்திருக்கின்றேன்)

கிழக்கு திரும்பிய கருணாவிற்கு வன்னி வந்து செல்லுமாறு பிரபாகரனிடம் இருந்து பல கட்டளைகள் வருகின்றது. ஆனால் உயிருக்கு பயத்தில் வன்னி செல்ல மறுத்த கருணாவிற்கு புலிக்கேணல் பதிவியையும் பிரபாகரனையும் விட நாட்டமில்லாமல் காடுகளுள் ஒழிந்திருந்து கொண்டு தனது தலைவருக்கு கடிதம் ஒன்று எழுதுகின்றார்.

அக்கடிதத்திலே பிரபாகரனை தனது உயிரிலும் மேலாக நேசிக்கும் தலைவர் எனக்குறிப்பிட்டு, உங்களது சிறந்த வழிநடத்தலில் எமது ஏகப் பிரதிநிதித்துவக் கொள்கையின் கீழ் என்னை கிழக்கு மாகாணத்தில் பொட்டு மற்றும் சிலரது தலையீடு இல்லாமல் சுயமாக செயற்பட்டு எமது இலட்சிய தாகமான தமிழீழப் போரை முன்னெடுத்துச் சென்று புலிகளின் தாகம் தமிழீழ தாயமாகிய தமிழீழத்தை அடைய அனுமதியுங்கள் என அனுமதி கோரியிருந்தார். அதற்கு பிரபாகரனிடமிருந்து பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை.

கிழக்கு மாகாண தளபதிகளைக் கூட்டிய கருணா தனக்கு தமிழீழ இராணுவத் தளபதி பதவி வழங்கப்படாமை நியாயமற்றது என அழுது புலம்பியதுடன் அவர்களை வன்னிக்கு சென்று பிரபாகரனுடன் பேசி ஒருவாறு தனது எண்ணங்களை தெரியப்படுத்தி கிழக்கில் சுயமாக செயற்படுவதற்கு அனுமதியை பெற்று வாருங்கள் என அனுப்பினார். வன்னி சென்ற கிழக்கின் மூத்த உறுப்பினர்கள் அனைவரும் அங்கு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். கருணாவின் தமிழீழ இராணுவத் தளபதி மோகத்திற்கு ஆப்படிக்கப்பட்டது.

கருணாவினால் வலுக்கட்டாயமாக அவ்வியக்கத்தில் வைக்கப்பட்டிருந்த இளைஞர் யுவதிகள் மூவாயிரத்திற்கு மேற்பட்டோர் இந் நிலைமைகளை அவதானித்ததும் இயக்கத்தை விட்டு ஓடினர். ஏஞ்சியிருந்த சிலரை கருணா தானக முன்வந்து உங்கள் வீடுகளுக்குச் செல்லுமாறு கட்டளையிட்டார். ஆனால் கருணாவின் அழைப்பை அவ்வியக்கத்தில் இருந்த முக்கிய உறுப்பினர்கள் எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. குகனேசன், பிள்ளையான், பாரதி, வீரா, தவசீலன், மார்கன், மங்களன் என இடைநிலைப் பொறுப்பாளர்களாக இருந்த சிலர் ஏதோ ஓர் நிலைப்பாட்டில் கருணாவிற்கு உயிர்பிச்சை கொடுத்து கருணாவின் உயிரைக் காப்பாற்ற அயராது உழைத்தனர். ஆனால் இன்று அவர்களை எவ்வாறு முடித்துக்காட்டலாம் என்பதுதான் கருணாவின் முழுச் சிந்தனையாக இருப்பதை அங்கு நிகழ்ந்து வரும் நிகழ்வுகள் எடுத்துக்கூறுகின்றன:

ஏனவே கருணாவை மாபெரும் ஜனநாயக விரும்பியாக சித்தரிக்க முனையும் பெரும்பாண்மையினத்தவர்கள் சிலர் பிரபாகரன் கருணாவிற்கு கிழக்கில் தனியாக இயங்க அனுமதித்திருந்தால் கருணா எவ்வாறான ஜனநாயகவாதியாக இருந்திருப்பார் என்பதை சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

ஏன் இன்றும் கூட வன்னியில் பிரபாகரனுடன் இருந்து சகல ஊடகங்களையும் அடக்கி ஆண்ட வரலாற்றுப் பழக்கம் கருணாவை விட்டுப்போகவில்லை.:

ஊடகங்கள் எவ்வாறு அடக்கப்பட்டன? இலங்கை அரசின் பத்திரிகைகள் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனச் செய்திகள் மற்றும் கொலைக்காட்சி செய்திகளை அரசின் பரப்புரை என மக்களுக்கு கூறிய புலிகள் இது கருணா அம்மானின் கட்டளை எவரும் இலங்கை அரசினால் ஒலி, ஒளி பரப்படும் செய்திகளை செவிமடுக்வோ அன்றில் அரச அச்சகத்தால் வெளியிடப்படும் பத்திரிகைகளை வாசிக்கவோ கூடாது எனவும் ஆயிரத்து தொளாயிரத்து எண்பதுகளின் நடுப்பகுதியில் மக்களை துன்புறுத்தியிருந்தனர்

அன்று மக்களின் ஊடக சுதந்திரத்திற்கு சாவு மணியடிதிருந்த கருணாவின் ஆட்கள் செய்திநேரங்களில் துவிச்சக்கர வண்டிகளில் பதுங்கித் திரிந்து, கருணாவின் கட்டளையை மீறி இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் செய்திகளை கேட்டோரை தாக்கியது, அவர்களது வானொலிகளை அபகரித்துச் சென்றது, அவ்வானொலிகளை அவ்விடத்திலேயே உடைத்தது போன்ற சம்பவங்களை ஒரு முறை மீட்டிப்பார்க்கின்றேன்.

நியாயமான கருத்துக்கள் மக்களை சென்றடைய கூடாது என்ற வக்கிர புத்தியை புலிகளுக்கு புகட்டிய ஆசான் கருணா என்பது இலகுவில் மறந்து விடக்கூடிய விடயம் அல்ல. அத்துடன் தற்போது தனது காழ்புணர்ச்சிகளை தீர்க்க, தமது அரசியலுக்கு எதிராக நிற்க கூடியவர்களை பழி தீர்ப்பதற்கு மஞ்சள் பத்திரிகை போன்ற சில இணையங்களை தனது சகாக்களினூடாக இயக்கி வருகின்றார்.

அவ்வாறான அவ் இணையங்களின் கூலித்தொளிலாளர்களில் சுவிஸில் உள்ள ஒருவரை கருணா எனக்கு ஒருமுறை அறிமுகம் செய்து வைத்தார். கருணா அவ்வாறு அறிமுகம் செய்த சில நாட்களில் அவ் இணையங்களில் மட்டு மேயர் சிவகீதா தொடர்பாக மிகவும் அநாகரிகமான வார்த்தைகளில் எழுதப்பட்டிருந்த விடயங்களைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். உடனடியாக அவ்விணையத்தை நடாத்துகின்ற கருணாவினால் எனக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். உங்கள் இணையத்தில் வெளியிட்டுள்ள செய்தி உண்மைதானா? என வினவினேன். ஆம் என்ற பதில் வந்தது. அவ்வாறு அது உண்மையாயினும் அங்கு பிரயோகிக்கப்பட்டிருக்கின்ற வார்த்தை பிரயோகங்கள் ஊடக தர்மத்திற்கு அப்பாற்பட்டது என்பதை உணர்வீர்களா? என வினவினேன். நான் அதை உணர்கின்றேன் ஆனால் என்னால் எதுவும் செய்யமுடியாது இது எங்கள் கருணா அம்மானின் உத்தரவு அவர் சொல்வதை நான் செய்யவேண்டும் எனக் கூறி தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

கருணாவின் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தினேன் மேயர் சிவகீதா தொடர்பாக எழுதப்பட்டுள்ள செய்தியில் உண்மைகள் உண்டா என கருணாவை கேட்டேன். ஆம் அது உண்மைதான் நான்தான் அவ்விடயத்தை வெளிக்கொண்டுவருமாறு உத்தரவு வழங்கினேன் என்றார். ஆனால் அதன் வார்த்தை பிரயோகங்கள் மனித நாகரிகத்திற்கு அப்பாற்பட்டவையாக காணப்படுகின்றதே என்றேன். மறு முனையில் தொலைபேசி துண்டிக்கப்பட்டது.

இவ்வாறே கருணா ஊடகங்களை அடக்கியும் தமது தேவைகளுக்காக பொய்பிரச்சாரங்களைச் செய்தும் வந்துள்ளார். அனால் மஹிந்த அரசுடனும் இணைந்து கொண்டு அதே நடவடிக்கையாக சுதந்திர ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதனை ஏற்றுக்கொள்ள முடியுமா என்பது கருணாவை ஜனநாயக வழிக்கு திரும்பியுள்ள மாமனிதர் எனக் குறிப்பிடுவோரிடம் கேட்கப்படவேண்டிய கேள்வியாகும்.

பிரபாகரனிடம் இருக்கும்போது தனக்கு வேண்டப்படாதவர்களுக்கு துரோகிப்பட்டம் கொடுத்த பழக்கதோசம் கருணாவை விட்டுச் சென்றதாக தெரியவில்லை. இலங்கை அரசுடன் இணைந்துள்ள கருணா தற்போது தனக்கு வேண்டாத தமிழர்களை புலிகள் எனவும், சிங்கள மற்றும் முஸ்லிம்களை இந்திய றோ, பிறநாட்டு உளவுத்துறை ஏஜென்டுக்கள் எனவும் காட்டிக்கொடுத்து அரசினை தவறான வழிக்கு இட்டுச் செல்ல முயல்கின்றார் என்பதுவும் சுட்டிக்காட்டப்படவேண்டிய விடயமாகும்.

கருணாவின் ஆட்களால் எனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட செய்தியறிந்த எனது நண்பர்கள் என்னை தொடர்பு கொண்டபோது, தவறு செய்கின்றவனை திருத்த முயற்சிக்கலாம் கருணா தவறு செய்யவில்லை இது அவரது பிறவிக்குணம் ஆகவே பிறவிக்குணத்தை உன்னால் மாற்றமுடியாது வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கவேண்டாம் என்று அறிவுறுத்தினார்கள்.

நான் இதை எழுதுவதன் நோக்கம் கருணாவின் செயற்பாடுகளை புதிதாக மக்களுக்கு சொல்வதற்காக அல்ல. அவர்களுக்கு தெரிந்து விடயம் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் மக்கள் இனியும் மூட்டைப் பூச்சிகளுக்கு பயந்து வீட்டைக் கொழுத்தாமல் விட்டுக்குள் நுழையும் அந்த பூச்சிகளை இல்லாது ஒழிக்க முற்பட வேண்டும் என்பதை சொல்வதற்காக. ஆத்துடன் எம்மிடையே உள்ள சமுதாய நலனில் ஆர்வம் உள்ள மனிதர்கள் எம்தேசத்தில் உள்ள அநியாயங்களை வெளிக்கொணர முன்வரவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவே இவ்விடயங்களில் விசேட கவனம் செலுத்துகின்றேன். VIII

Read more...

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ரணிலாக இருக்கக் கூடாது - புதிய ஜாதிக ஹெல உறுமய

மகிந்த ராஜபக்ஷவை வெற்றிகொள்ளக் கூடிய வலு ரணில் விக்ரமசிங்கவிடம் இல்லை என்பதால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக நிறுத்துவதை தனிப்பட்ட ரீதியில் விரும்பவில்லை என எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டுள்ள புதிய ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் சரத் மனமேந்திர தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டமைப்பில் இணைந்துகொண்டமை தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் சந்திப்பின் போது இதனை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக்கூட 4 பேர் கொண்ட பட்டியல் இருப்பதாகவும் இவர்களின் பெயர் எஸ் என்ற ஆங்கில எழுத்தில் ஆரம்பிப்பதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த எஸ் எழுத்து பட்டியல் தொட்ர்பில் அச்சம் கொண்டுள்ளதாகவும் மனமேந்திர கூறினார். எனினும் எஸ் எழுத்து கொண்ட நபர்கள் யார் என்பதை அவர் வெளியிடவில்லை. ஜெனரல் சரத் பொன்சேக்கா, முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா, சரத் மனமேந்திர, சுமங்கள தேரர் ஆகியோரை புதிய ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.




Read more...

இராணுவத்தில் இருந்து ஓடிய அனைவரும் நீக்கப்படுகின்றனர்.

இராணுவத்தில் இருந்து தப்பியோடி கடந்த 31 மே மாதம் 2009 ம் திகதி வரை சேவைக்கு திரும்பியிராத அனைவரும் இராணுவச் சேவையில் இருந்து உத்தியோக பூர்வமாக நீக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் எதிர்வரும் 24ம் திகதி ஆகஸ்ட் மாதம் முதல் 14ம் திகதி செப்ரம்பர் மாதம் வரை நாடளாவிய ரீதியில் விசேட நிகழ்ச்சிநிரல் ஒன்று தயார்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.

Read more...

நல்லூர்த் திருவிழாவை முன்னிட்டு விமானக் கட்டணம் குறைப்பு

நல்லூர்த் திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணத்திற்கும், கொழும்பிற்கும் இடையிலான விமானப்படையினரின் விமானசேவைக் கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, விமானப் படையினரின் விமானத்தில் பயணிக்கும் பொதுமக்களிடமிருந்து, எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 22ஆம் திகதிவரையான காலப்பகுதியில் 17 ஆயிரம் ரூபா கட்டணம் அறிவிடப்படவிருப்பதாகவும் சுற்றுலா ஊக்குவிப்பு அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். அத்துடன், தினமும் 5 தடவைகள் விமானப்படையினரின் விமானசேவை நடத்தப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்திற்கும், கொழும்பிற்கும் இடையிலான விமானப் படையினரின் விமானசேவை கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், விமானப்படையினரின் விமானசேவையானது வாரத்திற்கு 3 தினங்கள் நடைபெறுமெனத் அறிவிக்கப்பட்டிருந்ததுடன், யாழ்ப்பாணத்திற்கும், கொழும்பிற்கும் இடையிலான இருவழிப் பயணத்திற்கான கட்டணமாக 19ஆயிரத்து 100ரூபா அறவிடப்படுமெனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நல்லூர்த் திருவிழாவை முன்னிட்டு, இரண்டாயிரத்து 100 ரூபாவால் விமானப்படையினரின் விமானசேவைக் கட்டணம் குறைக்கப்பட்டிருக்கிறது.

Read more...

புலிகளின் புதுத் தலைவர் கே.பி.-யா - நெடியலனா?

பிரபாகரன் திருமணத்தின்போது மாப்பிள்ளைத் தோழனாக இருந்த கே.பி. இப்போது அவர் இடத்தைப் பிடித்திருப்பதாக வரும் தகவல்கள், உலகத் தமிழர்களிடையே விவாத அலைகளைக் கிளப்பியுள்ளன. இதே நேரம், 'எம்முடைய ஒரே தலைவர் பிரபாகரன்தான். வேறு யாருமல்ல...' என்ற எதிர்ப்புக் குரல்களும் எழ ஆரம்பித்திருப்பதால், உலகத் தமிழ் அரங்கு மீண்டும் சலசலப்பாகியுள்ளது.

நியூயார்க் வாழ் வழக்கறிஞர் விசுவநாதன் ருத்ரகுமாரன் உதவியுடன் புலிகளின் புதிய தலைவர் என அறிவிக்கப் பட்டிருக்கிறார் கே.பி. ஆனால்... நாடு கடந்த தமிழ் ஈழ அரசை அமைப்பதில் தீவிரம் காட்டி வந்த வீரகட்டி மணிவண்ணன் என்கிற கேஸ்ட்ரோ, நார்வேயில் இருக்கும் கே.பி. ரேகி முன்னாள் புலிகளின் பொருளாதார ஆலோசகரான ரூட் ரவி உட்பட பலர் கே.பி-யை தீவிரமாக எதிர்க்கிறார்கள்.

இது குறித்து பல்வேறுபட்ட உலகத் தமிழ் அமைப்புகளிடமும், தனிப்பட்ட தமிழ் உணர்வாளர்களிடமும் விலாவாரியாக விசாரித்தோம்.

''தலைமையிடம் காலியாகவே இருந்தால், அதை தட்டிப்பறிக்க பலர் முயலுவார்கள். எனவே, கே.பி-யை தலைவர் என்று அறிவித்துவிட்டால், கட்டுப்பாடு தானாகவே வரும் என்று கருதினார் ருத்ரகுமாரன். அதனால், அவரே உலகம் முழுவதும் உள்ள, ஈழ தமிழ்ச் சங்கம் மற்றும் பல அமைப்புகளின் தலைவர்களை பேசி சம்மதிக்க வைத்தார்.

ஆனால், கேஸ்ட்ரோ தரப்பு இதை ஏற்றுக் கொள்வதாக இல்லை. புலிகளின் தலைவர் பதவிக்கு அவர்களின் சாய்ஸ் பேரின்பநாயகம் சிலாபரன் என்கிற நெடியலன். 33 வயது நெடியலன் எஸ்.பி.தமிழ்ச்செல்வனின் பிரதான சீடர். 18 வயதில் புலிகளின் இயக்கத்தில் சேர்ந்து ரஷ்யாவுக்கு ராணுவப் பயிற்சி பெற அனுப்பி வைக்கப்பட்டவர். தாய்லாந்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் தமிழ்ச்செல்வனுக்கு வலதுகரமாகச் செயல்பட்டவர். நெடியலன் மட்டுமல்ல, அவருடைய குடும்பமே புலிக் குடும்பம்தான். அவருடைய மனைவி சிவகௌரியின் தாய் மாமன் ஞானேந்திர மோகன் எனும் ரன்ஜன் லாலாதான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல் ஆயுள் உறுப்பினர். இவர், யாழ்ப்பாணத்தில் இலங்கை ராணுவத்தினரால் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டவர். இவர் மீது பிரபாகரனுக்கு மிகுந்த மரியாதை உண்டு. அதைத் தங்களுக்கு சாதகமாக்கி, நெடியலனை தலைமை ஏற்க முயல்கிறது கேஸ்ட்ரோ தரப்பு. கே.பி-யை அயல்நாடுகள் வாழ் ஈழத் தமிழர்களின் பொறுப்பாளராக பிரபாகரன் நியமித்தபோதே, அதை எதிர்த்தவர்கள் இப்போது எப்படி ஆதரிப்பார்கள்?'' என்றவர்கள் தொடர்ந்தனர்.

''பாலியல் குற்றச்சாட்டு, பண மோசடி, ஊழல் வழக்குகளில் சிக்கிய கே.பி-யை 2002-ம் ஆண்டு பிரபாகரன் உத்தரவின் பேரில் தமிழ்ச்செல்வன் இயக்கத்தை விட்டு விலக்கிவைத்தார். இதையடுத்து, கே.பி., தாய்லாந்து சென்று அந்த ஊர் பெண்ணை மணந்து செட்டிலாகிவிட்டார். ஆனால், பிரபாகரனிடம் மட்டும் தொடர்பு வைத்திருந்தார். இது தமிழ்ச் செல்வனுக்கே தெரியாது.

கே.பி.முழுமையான புலியே அல்ல. அவர் இலங்கை அரசின் ஒற்றர். தமிழ்ச்செல்வனை பழிவாங்கப் போட்டுக் கொடுத்ததே கே.பி-தான். பிரபாகரன் மரணத்தைப் பற்றி அமைப்பு அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்காத நிலையில்...

முந்திக் கொண்டு மே 18-ம் தேதி அவர் வீரமரணம் அடையவில்லை என்று கே.பி. அறிவித்தார். அதே கே.பி-தான், தமிழக அரசியல்வாதிகள் போல பின், 'பிரபாகரன் வீரமரணம், ஒரு வாரம் துக்கம்' என்று அடுத்தடுத்து பல்டி அடித்தார். 'இதைக் கூற நீயென்ன எங்கள் தலைவனா?' என்று தமிழ் புனரமைப்புக் குழு என்ற அமைப்பு கடுமையாக எதிர்த்தது.

அப்பேர்ப்பட்ட கே.பி-யை ஒருபோதும் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் மட்டுமல்ல, நெடுமாறன், வைகோ போன்ற தமிழகத் தலைவர்கள் கே.பி-யை ஆதரிக்கவில்லை. பலமுறை அவர்களுடன் பேசி தங்கள் நியாயத்தை புரியவைக்க கே.பி. முயன்றும் இயலவில்லை!'' என்கிறார்கள்.

இந்த நிலையில் கே.பி. ஆதரவாளர்களோ...

''வீரகட்டி மணிவண்ணன் என்கிற கேஸ்ட்ரோ இப் போது உயிருடன் இல்லை. பிரபாகரனின் சாவுக்கு முன்பே முள்ளிவாய்க்கால் போரில் சயனைடு கடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் பெயரால் வரும் மின்னஞ்சல்கள் போலியானவை. 2006-ம் ஆண்டு புலிகள் இயக்கம் ராணுவ ரீதியாக பலமிழந்தபோது, பிரபாகரன் அழைத்த முதல் நபர் கே.பி-தான். ஏராளமான வெளிநாட்டு போர் தளவாடங்களை புலிகளுக்கு மீண்டும் வாங்கிக் கொடுத்து உதவினார் கே.பி. அவற்றை சாதுர்யமாக வன்னிப்பகுதிக்கு பத்திரமாக சேர்ப்பித்தும் உதவினார். இது நெடியலன், கேஸ்ட்ரோ போன்றவர்களுக்கு கலக்கத்தை உண்டாக்கியது. அவர் அனுப்பிய மூன்று ஆயுதக் கப்பல்களில் இரண்டு பத்திரமாக வன்னிக்கு சென்றது. ஒன்றை மட்டும் இலங்கைக் கப்பல் படை அழித்துவிட்டது. கண்கலங்கிய பிரபாகரன் கே.பி-யை மீண்டும் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்ற அழைத்தார்.

ஜனவரி 2009-ல் பிரபாகரன் கே.பி-யை சர்வதேசத் தலைவராக நியமித்தார்!'' என்கின்றனர்.

இதற்கிடையே, லண்டனில் உள்ள 'சின்ன ரன்ஜித்' என்பவரும் கே.பி-க்கு எதிராக தீவிரப் பிரசாரத்தில் இருக்கிறார். மறைந்த ஆண்டன் பாலசிங்கத்தின் செயலாளராக இருந்தவர்தான் இந்த சின்ன ரன்ஜித். இவர், பாலசிங்கத்தின் மனைவி அடேலின் பாசத்தையும் பெற்றவர். புலிகள் வானொலியின் பொறுப்பாளரும் கூட. தான் மட்டுமல்ல, அடேல் பாலசிங்கமும் கே.பி-யை எதிர்ப்பதாக இவர் பிரசாரம் செய்தும் வருகிறார்.

ஆக மொத்தத்தில், ''கே.பி. அடிக்கடி, 'பிரபாகரனே என்றும் தலைவர். நான், தலைமைச் செயலாளர்தான். தலைவர் இருந்த இடத்தில் யாரையும் நினைத்துப் பார்க்கவே மனம் கூசும்' என்றும் கூறிவந்தார். அப்படிப்பட்டவர் தன்னைத்தானே தலைவராகப் பிரகடனப்படுத்திக் கொண்டது தமிழ் ஈழ தேசியத் தலைவருக்கு செய்திருக்கும் பச்சை துரோகம்!'' என்கின்றனர் கே.பி-யின் எதிர்ப்பாளர்கள்.

இதுபற்றியெல்லாம் கே.பி-யிடமே நாம் பேசினோம்.

''பிரபாகரன் இறப்பதற்கு முன்பு என்னிடம், 'ராணுவ ரீதியாக இனி புலிகள் செயல்பட முடியாமல் போகலாம். தீவிரவாதி என்கிற இமேஜ் என்னுடன் போகட்டும். இனி உலக நாடுகளை அரவணைத்து தமிழ் ஈழம் காணுங்கள். இயக்கத்தை வழி நடத்தி பிணைக் கைதிகளாக இருக்கும் தமிழர்களை மீட்டு, சிறையில் வாடும் தம்பிகளை வெளியே கொண்டு வாருங்கள்!' என்று கூறினார். அதைத்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன்...'' என்று நம்மிடம் கூறினார் கே.பி.

ஆரம்பத்தில் கே.பி-யை எதிர்த்த புலிகளின் புலனாய்வுத் துறைத் தலைவரான அறிவழகன், இரண்டு தரப்பினரையும் அழைத்து லண்டனில் ஜூலை 20-ம் தேதி பேசினார். ஆனாலும்... கே.பி-தான் ஒருமனதான தலைவர் என்ற முடிவுக்கு வரமுடியவில்லை.

தலைமைப் பதவிக்கு போட்டி என்பது புலிகளின் வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வு! அறிவழகன் நடத்திய பேச்சுவார்த்தை முறிந்ததா? அதையடுத்து... கே.பி-யே தன்னிச்சையாகத் தலைவராகத் தம்மை அறிவித்துக் கொண்டாரா? இப்படி, பல கேள்விகள் குடைய.... என்ன நடக்கிறது என தெரியாமல் தவிக்கிறார்கள் உலகத் தமிழர்கள்!

நன்றி:ஜூனியர் விகடன்

Read more...

சட்டவிரோத ஆட்கடத்தல் வியாபாரத்தில் ஈடுபட்ட தங்கப்பதக்க வீரருக்கு இருவருட சிறைத் தண்டனை.

தேசிய மெய்வல்லுனர் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றுள்ள எச்.டி வருண ரங்க குமார விமலவன்ச எனப்படுபவருக்கு கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றம் சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக இருவருட சிறைத்தண்னையுடன் கூடிய 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் 2 லட்சம் ரூபா அபராதமும் விதித்துள்ளது.

Read more...

Thursday, July 30, 2009

தற்கொலையாளிகள் உட்பட சகல மட்ட புலிகளுக்கும் புனர்வாழ்வு நீதி அமைச்சின் கீழ் செயற்பாடு: ஆணையாளர் நாயகமும் நியமனம்

புலிகள் இயக்கத்திலிருந்த தற்கொலையாளிகள் உட்பட அனைத்துத் தராதரங்களையும் சேர்ந்த உறுப்பினர்களுக்கும் புனர்வாழ்வளிப்பதற்கு அரசாங்கம் விசேட செயல்திட்டமொன்றை அமுல்படுத்தியுள்ளது. புனர்வாழ்வுப் பணிகளை முன்னெடுப்பதற்காக மேஜர் ஜெனரல் தயா ரட்னாயக்க புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம், இதுவரை காலம் ஜனாதிபதியின் பொறுப்பின் கீழிருந்த புனர்வாழ்வு திணைக்களம், அடுத்த வாரத்திலிருந்து நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளதாக புதிய ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தயா ரட்னாயக்க (இராணுவ முன்னாள் ஊடகப் பேச்சாளர்) நேற்று தகவல், ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுடன் செய்தியாளர் மாநாட்டில் மேஜர் ஜெனரல் கலந்துகொண்டு மேலும் தகவல் தருகையில், “இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள், கைதுசெய்யப்பட்டவர்கள் எனப் பத்தாயிரம் புலி உறுப்பினர்கள் தற்போது 12 முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தொகை 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை அதிகரிக்கவும் வாய்ப்புண்டு. இவர்கள் அனைவரையும் புனர்வாழ்வளித்து முகாமுக்கு வெளியில் கொண்டுவருவதுடன், நாட்டின் உற்பத்தித் துறையில் ஈடுபடுத்தி, சமூகத்துக்குள் உள்வாங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கிழக்கு மாகாணத்தில் சுமார் ஆயிரம் புலி உறுப்பினர்களுக்கும், சிறுவர் போராளிகளுக்கும் புனர்வாழ்வு அளிக்கும் முகமாக அப்போது ஜனாதிபதியின் பொறுப்பின் கீழ் புனர்வாழ்வு திணைக்களம் செயற்படுத்தப்பட்டது. தற்போதும் 837 பேர் கிழக்கில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால், புலிகள் இயக்கம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியவர்களின் தொகை அதிகரித்துள்ளது.

அதனால், தனியான திணைக்களத்தை உருவாக்கி என்னை ஆணையாளர் நாயகமாக ஜனாதிபதி நியமித்துள்ளார்” என்று தெரிவித்த அவர், “புலிகள் இயக்கத்தினரின் செயற்பாட்டில் பங்குபற்றிய உறுப்பினர்களைத் தரம்பிரித்து, அதற்கேற்ற வகையில் புனர்வாழ்வு அளிக்கப்படும். இயக்கத்திற்காக சுவரொட்டி ஒட்டியவர்கள் முதல் தற்கொலையாளிகள் வரை இனங்கண்டு அனைவருக்கும் புனர்வாழ்வளிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்” என்று தெரிவித்த துடன், இது தொடர்பில் வர்த்த மானி அறிவித்தலில் விபரமாகக் குறிப்பிடப்படும் என்றும் கூறினார்.

“முதலில் புலிகள் இயக்கத்தின் தொடர்பு பற்றி ஆராய்ந்து வருகின்றோம். அவர்களின் கல்வி நிலை, வயது, தொழில் விருப்பு வெறுப்புகள் என்பவற்றை அறிந்து அதற்கேற்ப புனர்வாழ்வளிப்போம்” என்றும் குறிப்பிட்டார்.

Read more...

மதகுருவுக்கும் அவருடைய தந்தைக்கும் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் தொழில்வாய்ப்பு பெற்றுதருவதாக கூறி ஜந்து நபர்களிடம் ஆறு லட்சம் ரூபா பணத்தை பெற்று தலைமறைவாகியிருந்த மதகுரு ஒருவருக்கும் அவருடைய தந்தைக்கும் கல்கிஸ்ஸ பிரதம நீதவான் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளார். தெகிவளை மதவழிபாட்டுதலம் ஒன்றில் வைத்து பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட குறிப்பிட்ட மதகுருவான ஜிகும் மடுவகே விமலவுட்டி என்பவர் நிதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது தனது மகனான மதகுரு பெற்றுக்கொண்ட தொகையை திருப்பி கொடுப்பதாக அவருடைய தந்தையான ஜினடாச என்பவர் வாக்குறுதியளித்ததற்கு இணங்க நீதிமன்றம் அவரை சரீரப் பிணையில் விடுதலை செய்திருந்தது.

ஆனால் தற்போது குறிப்பிட்ட மதகுருவும் அவருடைய தந்தையும் அப்பணத்தை திருப்பி கொடுக்காமல் தலைமறைவாகியுள்ளதால் கல்கிஸ்ஸை பிரதம நீதவான் இருவருக்கும் பிறப்பித்துள்ளார்.

Read more...

கைகள் பின்னால் கட்டப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட இருவரது உடல்கள் மீட்பு.

நுகெகொட தெல்கந்த பிரதேசத்தில் கைகள் பின்னால் கட்டப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டிருந்த இருவரது உடலங்கள் இன்று காலை பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பாதாள உலக குழுக்குளைச் சேர்ந்தவர்களாக இருக்காலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

தொடர்ந்து தலையிட்டால், இந்தியா ஒருநாள் பாதிக்கப்படும்! இது நாம் விடுக்கும் நட்பு ரீதியான எச்சரிக்கை!! - சோமவங்ச அமரசிங்க

இலங்கை விடயத்தில் தொடர்ந்து தலையிடுமாயின், இந்தியா ஒருநாள் பாதிக்கப்படும் எனவும், இது அவர்களுக்கு தாம் விடும் நட்பு ரீதியான எச்சரிக்கையெனவும் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவங்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுடன் பகைமையை வளர்க்க தாம் விரும்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழொன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

நாளிதழுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'தற்போது 1,500 இந்தியர்கள் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக இங்கு வந்துள்ளார்கள். இந்தியர்கள் எதற்காக கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு வரவேண்டும். எமது நாட்டவர்களால் இதனைச் செய்ய முடியும். இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள். இந்தியாவுடன் பகைமையை வளர்க்க நாம் விரும்பவில்லை. அதனால்தான் நாம் சொல்கின்றோம் - இந்தியா ஒருநாள் பாதிக்கப்படும். இலங்கையின் பிரச்சினை அவர்களைப் பாதிக்கும் என்பதால் இது அவர்களுக்கு நாம் விடுக்கும் நட்பு ரீதியான எச்சரிக்கையாகும்.'

'எண்ணெய்க் குதங்களைப் பயன்படுத்துவதற்கான உரிமையை அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

திருகோணமலை துறைமுகத்தைச் சூழவுள்ள 679 சதுர கிலோ மீற்றர் பகுதி இந்தியாவிற்கான பிரத்தியேக பொருளாதார வலயமாக வழங்கப்பட்டது. இந்தப் பகுதிக்குள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களே செல்ல முடியாது தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலத்தை மீட்பதற்காக எமது இளைஞர்களே கொல்லப்பட்டனர். இந்த நிலத்தை தற்போது யார் ஆக்கிரமித்துள்ளார்கள்? இந்த நிலத்தை இந்தியா பயன்படுத்திக்கொள்வதற்காகவா எமது இளைஞர்கள் தமது உயிர்களைத் தியாகம் செய்து போராடினார்கள்? இந்தியா இன்று எம்மீது மேலாதிக்கம் செலுத்த முற்படுவதுடன், எமது வளங்களைப் பயன்படுத்தவும் முயற்சிக்கிறது. அரசியல் ரீதியாக எம்மீது ஆதிக்கம் செலுத்தவும் முற்படுகின்றது.' எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான உச்சக் கட்டப் போர் நடைபெற்ற காலப்பகுதியில் இந்தியப் புலனாய்வு நிறுவனமான 'றோ' அமைப்பின் முகவர்கள் ஐம்பது பேர் வன்னியில் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்திற்குத் தெரியாமலேயே அவர்கள் வன்னியில் இருந்துள்ளனர். எனினும், போர் முடிவுக்கு வரும் நிலையில், அந்த 'றோ' முகவர்களின் பெயர்பட்டியல் ஒன்றை இலங்கை அரசாங்கத்திடம் வழங்கிய இந்திய அதிகாரிகள், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரியுள்ளனர்' எனவும் அவர் கூறியுள்ளார்.

'இவர்கள் ஏன் வந்தார்கள்? இவை இரகசியமானவையல்ல. ராஜீவ் காந்தியின் படுகொலையைக்குப் பின்னரும் 'றோ' இலங்கையில் செயற்பட்டுவந்துள்ளது. அவர்கள் விடுதலைப் புலிகளுடனும் தொடர்ந்து தொடர்புகளை வைத்திருந்தனர். இதனால்தான் இந்தியா தனது கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என நாம் கோருகிறோம்' எனவும் சோமவங்ச அமரசிங்க கூறியுள்ளார்.

'விடுதலைப் புலிகளுக்கு இந்தியாவே பயிற்சியளித்தது. அந்தத் தவறை அவர்கள் உணர்ந்துகொண்ட பின்னரே தமது அணுகுமுறையை மாற்றிக்கொண்டனர். பிரிவினைவாத சக்திகளால் தற்போதும் அவர்கள், முட்டாள்களாக்கப்படுகின்றார்கள் என்பதுதான் ஆபத்தானது' எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 1980-களில் இலங்கையில், தமது நலன்களை இந்தியா பெற்றுக்கொண்டது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.






Read more...

முகாம்களிலிருக்கும் மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

முகாம்களில் தங்கியிருக்கும் 2 இலட்சத்து 80ஆயிரம் பொதுமக்களை இலங்கை அரசாங்கம் உடனடியாக மீள்குடியேற்றவேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

முகாம்களில் பொதுமக்கள் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் குற்றஞ்சாட்டினார். கடும் மோதல்கள் காரணமாக, 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சென்றிருந்த பொதுமக்களே முகாம்களில் தடுத்துவைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இது சர்வதேச சட்டங்களை மீறும் செயலெனக் கூறிய பிரட் அடம்ஸ், ஏனைய இலங்கையர்களைப் போன்று முகாம்களிலிருக்கும் மக்கள் வாழ உரிமையுடையவர்களெனவும் தெரிவித்தார்.

Read more...

Wednesday, July 29, 2009

புலிகள் வந்து கடையில் கணக்கு கேட்டால் பொலிஸாரிடம் பிடிச்சு கொடுப்பேன் . நோர்வே கிட்டு

நோர்வேயில் புலிகளால் தமிழ் மக்களிடம் சேகரிக்கபட்ட பணம் தனிநபர் ஒருவரின் பெயரில் முதலீடு செய்யபட்டு உள்ளமை புலிகளிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக அம்பலாமாகியுள்ளது. நோர்வேயில் புலிகளின் நெய்தல் கடை, கிட்டர் என்பவரால் நடாத்தபட்டு வருவதாகவும் சுமார் 5 மில்லியன் குறோனர்கள் இவ்வர்த்தக ஸ்தாபனத்திற்க்கு முதலீடு செய்யபட்டு பொறுப்பாக கிட்டு என்பவரிடம் ஒப்படைக்க பட்டதாகவும், ஆனால் பிரபாகரன் கொல்லபட்டு புலிகளின் அமைப்பு அழிக்கபட்ட நிலையில் தற்போது கடையை கிட்டர் தனது சொந்த பெயருக்கு மாற்றியுள்ளதோடு சொத்துக்கள் அனைத்தும் அவருடைய பெயருக்கு மாற்றபட்டுள்ளது.

5 மில்லியன் குறோன் தற்போது அவரடைய சொத்தாகி உள்ளது என தெரியவருகிறது.
நாட்டில் இருந்து போராளிகள் சிலர் கடைக்கு வேலைக்கு வந்த அகதிகளாக உள்ளனர். அவர்களுக்கு 20 வீத கள்ள சம்பளம் கொடுக்கபடுகிறது. நோர்வேயில் உள்ள புலிகள் கணக்கு கேட்டபோது புலிகள் வந்து கடையில் கணக்கு கேட்டால் பொலிசிடும் பிடிச்சு கொடுப்பேன் என்டு கூறிவருவதாக தெரிவிக்கபடுகிறது.

நன்றி ரிபிசி

Read more...

பழையனவை துக்கியெறிந்து புதுமைகளை வாரிஅணைத்து இனியாவது ஒரு விதிசெய்வோம்

இருளில் மூழ்கியிருந்த
நம் பூமிக்கு உன்னால்
இயன்ற ஓர் விளக்கேற்றி
இனியாவது ஒரு விதிசெய்வோம்...

தீமைகளை விதைத்தவர்களை
விலக்கிவிட்டு விலங்கிட்டு
திறமைகளினால் விளக்கேற்றி
இனியாவது ஒரு விதிசெய்வோம்...

சுமைகளை தாங்கி தாங்கி
சோர்ந்துபோன மக்களுக்கு
சுயநலவாதமில்லாமல் நாங்கள்
இனியாவது ஒரு விதிசெய்வோம்...

இன்பங்களை சுமந்த மக்கள்
துன்பங்களில் குளித்தது போதும்
தலைதுடைக்க துணிகொடுத்து
இனியாவது ஒரு விதிசெய்வோம்....

ஏழைமக்களை ஏமாற்றி பிழைத்து
தருமர்களாய் வேடம் போட்ட
பாவிகளை விட்டுத்தள்ளி
இனியாவது ஒரு விதிசெய்வோம்...

உண்மைகளை பொய்மைகளாக்க
உலகத்திற்கு எடுத்துக்கூறி
உருவங்களை மறைப்பதை விட்டு
இனியாவது ஒரு விதிசெய்வோம்...

வீண்சோகங்களை மண்ணில் புதைத்து
பயன்தரும் சிறப்புகளை சிந்தித்து
தரணியில் விவேகங்களை விதைத்து
இனியாவது ஒரு விதிசெய்வோம்...

பாதையின் தடைகளை வீரமுடன்
கால்களுக்கு இடையூறின்றி விலக்கிவிட்டு
விந்தைகளை குறைத்து நோக்காமல்
இனியாவது ஒரு விதிசெய்வோம்...

பழையனவை தூக்கியெறிந்து நாம்
புதுமைகளை வாரிஅணைத்து
புவியின் ஈர்ப்புசக்கி அறிந்து
இனியாவது ஒரு விதிசெய்வோம்....

சுமைகள சுமப்பவர்களுக்கு
சுடுசோறு கொடுக்கவிட்டாலும்
சுமைகளை தாங்க கரமாவது கொடுத்து
இனியாவது ஒரு விதிசெய்வோம்...

புத்திஐpவிகளின் புகழ் பாடி
புரியாத புதிர்களுக்கு விடை தேடி
புதிய பாதையில் நடை போட்டு
இனியாவது ஒரு விதிசெய்வோம்....

ஆயுதம் வேண்டாம் அழிவு எமக்கு
அகிம்சையே போதும் என்றும் நமக்கு
அள்ளியெடுத்து முத்தமிட்டு
இனியாவது ஒரு விதிசெய்வோம்...

கிளியின் கிராமத்து நாயகன்
வவிதரன்

Read more...

மூன்று பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரலாக பதவியுயர்வு

விடுதலை புலிகளை யுத்த ரீதியாக தோற்கடிப்பதற்கு முக்கிய பங்குவகித்த பிரிகேடியர் பிரசன்ன டி சில்வா, பிரிகேடியர் சவேன்ற சில்வா, பிரிகேடியர் கலகே ஆகியோர் மேஜர் ஜெனரலாக பதவியுயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். அத்துடன் 46 கேணல்கள் பிரிகேடியர் தரத்திற்கு உயர்த்துப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Read more...

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர் சுட்டுக்கொலை.

பாதாள உலகைச் சேந்தவர் எனக் நேற்று மாளிகாவத்தைப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டவர் இன்று பேலியகொடப் பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணைகள் மேற்கொண்டபோது அவர் பேலியகொட பிரதேசத்தில் ஆயுதங்களை ஒழித்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவ் ஆயுதங்களை மீட்பதற்காக பொலிஸார் அவரை அங்கு அழைத்துச் சென்றபோது அவர் அங்கு மறைத்து வைத்திருந்த கிரனேட் ஒன்றை பொலிஸார் மீது வீச முற்பட்ட போது அவரை சுட்டுக்கொன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read more...

மட்டு-திருமலை ரயில் சேவை ஆரம்பம்

மட்டக்களப்பிற்கும் திருகோணமலைக்கும் இடையிலான 'ரயில்பஸ்' போக்குவரத்து சேவையினை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கும் விழா இன்று மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் இடம்பெற்றது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த போக்குவரத்து அமைச்சர் போக்குவரத்து டலஸ் அலகபெரும மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்கு இச்சேவை பிற்பகல் 4.30 ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்ததுடன் இச்சேவையை விரைவில் மட்டக்களப்பிலிருந்து கல்ஓயாவிற்கும் கல்ஓயாவிலிருந்து திருகோணமலைக்கும் விஸ்தரிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Read more...

இலங்கைநெற் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளது.

எமது இணையம் புலிக்கேணல் கருணாவின் அரசியல் பலத்தினால் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளது. தவறுகள் இடம்பெறும்போது சுட்டிக்காட்ட வேண்டிய கடமையை செய்தமைக்காக எமது இணையம் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதை நேயர்களுக்கான உங்களுக்கு வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளோம். மிக விரைவில் இலங்கை வாசகர்களுக்கு மறுக்ப்பட்ட உரிமை மீள அளிக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம்.

Read more...

Tuesday, July 28, 2009

புலிகளின் புலனாய்வுப் பிரிவு முக்கியஸ்தர் கொழும்பில் கைது

தற்கொலை அங்கி, பெருந்தொகை ஆயுதங்கள், வெடிபொருட்கள் மீட்பு

புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவுடன் தொடர்பு வைத்திருந்த முக்கியஸ்தர் ஒருவரை கொழும்பு, கொம்பனித்தெரு பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர நேற்றுத் தெரிவித்தார்.

பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இந்த நபர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் கொழும்பு கொட்டாஞ்சேனை பிரதேசத்திலிருந்து 10 கிலோ எடையுள்ள தற்கொலை அங்கி உட்பட பெருந் தொகையான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகளின் புலனாய்வுத்துறை முக்கியஸ்தரான பாக்கியராசா பிரதீபன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளாரென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தகவல் தருகை யில்:-

பயங்கரவாதத் தடுப்பு பிரிவு பொலிஸாருக்குக் கிடை த்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து கொம்பனித் தெரு பிரதேசத்தில் வைத்து பாக்கியராசா பிரதீபன் கைது செய்ய ப்பட்டுள்ளார்.

இவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கொட்டாஞ்சேனை பிரதேசத்திலுள்ள வீட்டில் மறைத்து வைத்திருந்த தற்கொலை அங்கியொன்றும் மற்றும் வெடி மருந்துகளையும் மீட்டெடுத்துள்ளனர்.

10 கிலோ எடையுள்ள தற்கொலை அங்கி அதிசக்தி வாய்ந்த குண்டுகள் 04, 3 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த காந்தவெடி-01, பெருந்தொகையான வெடிக்க வைக்கும் கருவிகள், கைக்குண்டுகள்-19. சைலன்சர் ரக பிஸ்டல், பல்வேறு வகையான துப்பாக்கி ரவைகள், பற் றரிகள்-5 மற்றும் உபகரணங்களையே அந்த வீட்டிலிருந்து பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து பல்வேறு தகவல் களை பெற்றுக் கொண்டுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவி னர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக் காட்டினார்.

Read more...

'வயது வந்தவர்களுக்கு மட்டும்' தடை வருகின்றது.

இலங்கையில் "வயது வந்தவர்களுக்கு மட்டும்" என திரையிடப்படும் படங்கள் யாவையும் தடைசெய்ய அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக கலாச்சார அலுவல்கள் அமைச்சர் மஹிந்த யாப்பா அபயவர்த்தன தெரிவித்துள்ளளார். அத்துடன் படங்களில் ஆபாசக்காட்சிகளை உள்ளடக்கிக்கொள்கின்ற விடயங்கள் கடுமையாக பார்க்கப்படும் என்பதுடன் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளதாகவும் கூறினார்.

அதேபோல் தொலைக்காட்சிகள், சஞ்சிகைகள் மற்றும் செய்தித்தாள்களில் விளம்பரங்களின் நிமித்தம் சமூகத்திற்கு ஒவ்வாத படங்களை பிரசுரிப்பதை தடுக்குமுகமாகவும் சட்டத்தில் திருந்தங்கள் கொண்டுவரப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

இலங்கையில் இந்தியா இரு வர்த்தக வலயங்களை நிறுவுகின்றது.

இந்தியா இலங்கையில் வர்த்த வலயங்கைளை அமைக்கும் பொருட்டு அதற்கான காணிகளை இனம் கண்டுவருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. திருமலை மற்றும் கிளிநொச்சிப் பிரதேசங்களில் இவ்வலயங்களை அமைப்பதற்கு இலங்கை அரசு இந்தியாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளதுடன் திருமலையில் காணி இனம் கண்டு கொள்ளப்பட்டுள்ளதாகவும், கிளிநொச்சியில் அந்நிலப்பகுதியை சேர்ந்தெடுக்கும் பணியில் இந்திய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளாகவும் கூறப்படுகின்றது.

இந்தியாவிற்கான இலங்கைப் பிரதி தூதர் திரு.ஹம்சா அவர்கள், இந்தியா இவ்வலயத்தினூடாக விவசாயம், மீன்பிடி, உல்லாசத் துறை என்பவற்றில் ஈடுபடும் என தெரியவித்துள்ளார். அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரம், 4200 பொருட்கள் சுங்கவரி இல்லாமல் இருநாடுகளுக்கிடையில் ஏற்றுமதி இறக்குமதி செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் இருநாடுகளுக்குமிடையில் ஏற்பாடாகியுள்ள கப்பல் சேவை இருநாடுகளுக்கும் இடையில் பொருளாதார தளர்ச்சியை ஏற்படுத்தும்.

Read more...

அனுதராதபுரம் விமானப்படைத் தாக்குதலின் கட்டளைத் தளபதி நீதிமன்றில் ஆஜர்.

எல்லாளன் நடவடிக்கை எனப் பெயரிட்டு அனுராதபுரம் விமானப்படைத் தளம் மீது புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் கட்டளைத் தளபதி இன்று(28 காலை) அனுராதபுரம் மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மன்றிற்கு தெரிவிக்கையில், சந்கே நபர் மேற்படி தாக்குதலுக்கான கட்டளைத் தளபதியாக செயற்பட்டுள்ளதுடன், தாக்குல் இடம்பெறும் போது தளத்திற்கு வெளியே நின்று தாக்குதலை ஆரம்பம் முதல் முடிவு வரை வீடியோ செய்து கொண்டு வன்னி சென்று அவற்றை புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் முக்கிய தளபதிகளுக்கு காண்பித்துள்ளார்.

இவ்வழக்கின் பிரதான சந்தேக நபரான றுபனின் தகவலின் பிரகாரம், 24 புலிகள் அதிநவீன ஆயுதங்கள், 8000 தோட்டாக்கள் சகிதம் வில்பத்து காட்டை ஊடடுத்து வந்து விமானப்படைத்தளத்தை அடைந்துள்ளனர். எங்களில் 21 பேர் தாக்குதலில் மரணமாக மூவர் தப்பிச் சென்றோம் என சந்தேக நபர் தெரிவித்துள்ளார். .

தப்பிச் சென்றவர்களில் பிரதான சந்கே நபரும் அடக்குகின்றார். இத்தாக்குதல் பிரதான சந்தேக நபரினாலேயே திட்டமிடப்பட்டுள்ளது.

தாக்குதலை திட்டமிட்டு வெற்றிகரமாக நாடாத்தி முடித்தமைக்காக பிரதான சந்தேச நபருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் லெப்.கேணல் பதவி வழங்கி பரிசில் பொருட்களையும் வழங்கியுள்ளார் என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மன்றிற்கு தெரிவித்தனர்.

Read more...

பண்டாரிக்குளத்தில் கொள்ளையில் ஈடுபட்ட ஈபிடிபி யினர் கைது.

வவுனினியா, பண்டாரிடிக்குளப் பிரதேசத்தில் கொள்ளையில் ஈடுபட்ட நபர் பிரதேச மக்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். இற்றைக்கு மூன்று தினங்களுக்கு முன்னர் மோட்டார் பைசிக்கிளில் வந்தவர்களால் அப்பிரதேசத்தில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக பொலிஸில் பதிவாகியிருந்துள்ளது.

அதே நேரம் நேற்று பிற்பகல் மேற்படி மோட்டார் சைக்கிள் பிரதேசத்தினுள் சுற்றித்திருந்தபோது மக்கள் பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கியதுடன், மக்களும் ஒன்று சேர்ந்து உசார் அடைந்துள்ளனர். பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து மோட்டார் கைக்கிளில் வந்தவர்களை கைது செய்ய முற்பட்டபோது ஒருவர் தம்பியோட, ஒருவர் பிடிபட்டுள்ளார். அவரிடமிருந்து கிரேனேட் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டள்ளதுடன், ஓடியவரது கைத்துப்பாக்கி கீழே விழுந்து கிடந்து மக்கள் அதை பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் வேலு யோகன, நிலையாமோட்டை பூவரசங்குளம் எனும் விலாசத்தை நேர்ந்தவர். இக்கொள்ளைக்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் HERO HONDA Mp GQ 0984 எனும் இலக்கம் கொண்டதாகும்

கைது செய்யப்பட்டுள்ள மேற்படி நபர் ஈபிடிபி அமைப்பைச் சேர்ந்தவர் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

Read more...

Monday, July 27, 2009

நோர்வே புலிப் பொறுப்பாளர் முகிலன் தப்பியோட்டம்.

புலிகளின் நோர்வேப் பொறுப்பாளர் முகிலன் நோர்வேயில் இருந்து தப்பியோடியுள்ளதாக தெரியவருகின்றது. இவர் நோர்வே பொலிஸாரினால் தான் அவதானிக்கப்படுவதாக உணர்ந்தே அங்கிருந்து தலைமறைவாகி சுவிடன் நாட்டின் கோத்தபேர்க் பகுதியில் வசித்து வருவதாக கூறப்படுகின்றது. இவரது மனைவி பிள்ளைகள் வன்னியில் கடந்த மே மாதம் 18 ம் திகதி வெளியேறி இடைத்தங்கல் முகாம் ஒன்றில் தங்கியுள்ளனர்.

Read more...

என் கருத்து எனக்கு, உங்களது உங்களுக்கு. நீர்வேலி

நான் விரும்புவதை மற்றவர்களும் விரும்ப வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில்லை. நான் நினைப்பதைப் போலவே மற்றவர்களும் நினைக்க வேண்டியதுமில்லை. என்னுடைய விருப்பு பலருக்கு வெறுப்பாகலாம். நான் வெறுப்பதை பலர் விரும்பலாம். இவை மனித இயற்கை. என் எண்ணங்களை இங்கே வைத்திருக்கிறேன். என்னைப் போன்றே எண்ணமுள்ளவர்களைக் காணும் போது மனது மகிழ்வதும் இயல்புதானே. நேரெதிரான எண்ணமுள்ளவர்களை சந்திக்கும்போது - தவறான கொள்கையில் (என் பார்வையில்) இவ்வளவு பிடிவாதமாக இருப்பதற்காக வருத்தப் படுவேன் - ஆனால் அவர்களை வெறுப்பதில்லை. இயன்றால் அவர்களுக்காக பிரார்த்திப்பேன். அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். என் கருத்து எனக்கு, உங்களது உங்களுக்கு. என் கருத்தை விடவும் சிறப்பான கருத்துகள் யாரிடமிருந்தாவது வந்தால், அதன் உண்மைகளை யோசிக்க நான் தயங்க மாட்டேன்.

நீ இல்லை என்றால் நான் இல்ல என்பது காதல்....
யார் இல்லை என்றாலும் நான் இருப்பேன் என்பது நட்பு...
இதை தான் நான் கற்று கொண்டேன்...
எனது பழய நட்பில்..........
***********


ஒரு உயிரை நீ நேசிப்பது நிஜமென்றால் அதை பறவை போல் பறக்கவிடு..
அது உன்னை நேசிப்பது நிஜமென்றால் மீண்டும் உன்னை தேடிவரும்..

Read more...

கருணாவின் சுவிஸ் சுற்றுலா ரத்து.

சிறிலங்கா அரசின் தற்போதைய அமைச்சரும் முன்னாள் புலிக்கேணலுமாகிய விநாயக்கமூர்த்தி முரலிதரன் தனது பரிவாரங்களுடன் சுவிஸ் சுற்றுலா மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தநிலையில் இப்பயணத்திற்கான சுவிற்சர்லாந்து வீசா மறுக்கப்பட்டுள்ளதாக கருணாவின் நெருங்கிய சகாக்களில் ஒருவர் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார்.

மேற்படி சுற்றுப்பயணத்திற்கான வீசா மறுக்கப்பட்டமை சுவிற்சர்லாந்து நாடு எவ்வாறு மனித உரிமைகளை, மக்களின் மனஉணர்வுகளை மதிக்கின்றது எனும் விடயத்தில் மேலும் நம்பகத்தன்மையை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் பேசிக்கொள்கின்றனர்.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் அகதி முகாம்களில் சொல்லொணாத் துயரங்களை சந்தித்து நிற்கும் நிலையில், கருணா குழுவின் பயணம் தொடர்பாக ஐரோப்பா வாழ் தமிழ் மக்கள் மிகவும் ஆத்திரமடைந்திருந்ததாக அங்கு வாழும் மக்களுடாக அறிய முடிந்துள்ளது.

கருணாவின் பயண இரத்து விடயம் அரசிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கருணா கட்சி உறுப்பினர்களின் சம்பளப்பணத்தை சுருட்டிக்கொண்டு சுவிற்சர்லாந்து சுற்றுலா செல்கின்றார் எனவும் இப்பயணத்திற்கான முழுச்செலவு கருணாவினுடையது எனவும் செய்திகள் வெளியாகியிருந்தபோது, அச்செய்தியை முறியடிப்பதற்காக கருணாவின் ஆட்களால் இயக்கப்படும் இணையங்களில் கருணாவின் சுற்றுப்பயணம் அரசின் முழு அனுசரணையுடன் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அரசின் அனுசரணையில் இடம்பெறும் இராஜதந்திரிகளுக்கான பயணமொன்றிற்கு எந்த நாடும் மறுப்பு தெரிவிப்பதில்லை என்பது யாவரும் அறிந்த விடயம். எது எவ்வாறாயின் அரசின் அனுசரணையில் கருணாவின் பயணம் ஏற்பாடாகியிருந்தால், அரசின் சிபார்சிற்கும் அப்பால் அக்குழுவிற்கான விசா மறுக்கப்பட்டிருக்கின்றதாயின் கருணா இவ் உலத்தினால் ஏவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளார் என்பதை ஊகித்துக்கொள்வதற்கு விசேட அளவு மானிகள் எதுவும் தேவையில்லை.

அத்துடன் கருணா பயணம் செல்லும் போது தனது குழுவுடன் மூவைரை அழைத்துச் சென்று அவர்களை லண்டன் அனுப்ப திட்டமிட்டிருந்தாகவும், அதற்காக அவர்கள் ஒவ்வொருவரிடமும் தலா 35 லட்சங்கள் பெறப்பட்டிருந்தாகவும் தெரியவருவதுடன் அவர்கள் தற்போது தமது கடவுச்சீட்டுக்களையும் தாம் வழங்கிய முற்பணத்தையும் கேட்டு அலைந்து திரிவதாகவும் கதைகள் உலாவுகின்றன.

மேற்படி சுற்றுப்பயணத்திற்கு அனுசரணை (ஸ்பொன்சர்) வழங்கிய கருணாவின் சுவிற்சர்லாந்து பிரதிநிதி அவர்களுக்கான விசா இன்னும் 15 நாட்களில் கிடைக்கப்பெறும் என தெரிவித்துவருவதாகவும் கூறப்படுகின்றது.

Read more...

கனடாவில் வீரமக்கள்தினம்! பல்வேறு கட்சிகள் பங்கேற்பு!

கனடாவில் முதல் தடவையாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வீரமக்கள் தினமும், கறுப்பு யூலையும் 25.07.2009 சனிக்கிழமை நினைவுகூரப்பட்டது. அமரர்கள் அமிர்தலிங்கம் மற்றும் உமாமகேஸ்வரன் அவர்கள் இறந்த தினமான யூலை13-16 வரையிலான காலப்பகுதி வீரமக்கள் தினமாக தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தினரால் பிரகடனப்படுத்தப்பட்டு நினைவு கூரப்பட்டு வருகின்றது.

இந்த 20வது வீரமக்கள்தின நிகழ்வு கனடாவில் நினைவு கூரப்பட்டு, இறந்த அனைத்து தலைவர்கள் மற்றும் போராளிகள் பொதுமக்களுக்கும் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஒழுங்கு செய்திருந்த இவ் நிகழ்ச்சிக்கு இதர தமிழ்கட்சிகளில் இருந்து பலர் கலந்து கொண்டனர்.

புளொட் தலைவர் த.சித்தார்த்தன், கூட்டணித்தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஆகியோரின் இலங்கையில் இருந்து வந்த செய்திகளும் அங்கு தெரிவிக்கப்பட்டது. கட்சிகளின் சார்பில் நினைவுரைகளும் நிகழ்த்தப்பட்டது.

திரு.செல்வம் தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்ச்சியில், மறைந்த தலைவர்களது ஒளிப்படத்தொகுப்பும் காண்பிக்கப்பட்டது. புளொட் சார்பில் சாரங்கனும், ஈ.பி.ஆர்.எல்.எவ்(நாபா) சார்பில் ஜேம்ஸ் அவர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஜெயசங்கரி ஆனந்தசங்கரி அவர்களும் உரையாற்றினர்.

ஊடகங்களின் கடந்த தவறுகள் பற்றி அருள்பேர்ட் தனதுரையில் சுட்டிக்காட்டினார். மற்றும் சங்கர், இலங்கை சட்டத்தரணியும் அமரர் அமிர்தலிங்கத்தின் நெருங்கிய சகாவுமான தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர் கனகமனோகரனும், திருவாளர் அமிர்தலிங்கம், உமாமகேஸ்வரன், குட்டிமணி, தங்கத்துரை போன்ற தலைவர்கள் மற்றும் ஏனைய போராளிகள் பற்றியும் தமது அனுபவங்களை எடுத்துக் கூறினர்.

திரு அருள்ராஜ் அவர்கள் புளொட் சார்பில் கலந்து கொண்ட நீண்டகால புளொட் உறுப்பினர்களுக்கும் இதரகட்சி உறுப்பினர்களுக்கும், பொதுமக்களுக்கும் கட்சி சார்பில் நண்றியை தெரிவித்துக் கொண்டார்.

Read more...

பாடசாலைகளில் கையடக்க தொலைபேசி விடயம் கடுமையாக்கப்படும். கல்வி அமைச்சர்.

பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசி பாவிப்பது தடை தொடர்பான
சட்டம் மிகவும் கடுமையாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசி தடைச்சட்டம் கடுமையாக நடைமுறைப் படுத்தாமை பல துரதிஸ்டவசமான நிகழ்வுகளுக்கு வித்திட்டுள்ளது என அவர் மேலும் கூறியுள்ளார்.

பாடசாலையில் கையடக்க தொலைபேச பாவித்து அகப்பட்டுக்கொண்ட மாணவி ஒருத்தி தனது கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

உள்நாட்டு விமான சேவைக்கான முதலாவது விமானம் இன்று பலாலி சென்றது.

இலங்கை விமானப் படையினரால் நிர்வகிக்கப்படும் உள்ளநாட்டு விமான சேவையின் முதலாவது விமானப் பயணம் 15 பயணிகளுடன் ரத்மலான விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 8.00 மணிக்கு பலாலி புறப்பட்டது. இவ்விமானம் ஒரு மணித்தியாலயங்களில் பலாலி விமானப்படைத்தளத்தில் தரை இறங்கியதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Read more...

புலிகளின் தவறுகளைச் சுட்டிக்காட்ட மறுத்தன் ஊடாக புலிகளியக்கம் அழிவதற்கு த.தே.கூ உதவியது. சித்தார்த்தன்

சிறுவர்களை விடுதலை புலிகள் பலவந்தமாக படையில் சேர்க்கும் போது பாரளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் அதை நியாம்படுத்தியதன் மூலம் அவர்கடைய அழிவுக்கு துனைபோனவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் என்பதை மக்கள் மறந்து விடமாட்டார்கள் என தமிழ் ஈழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும் முன்னால் வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ரிபிசியில் சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்.

வவுனியா முகாம்கமில் உள்ள மக்களை பார்ப்பதற்க்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கவில்லை என்று குறை கூறிய தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் அனுமதி கேட்டு ஒரு கடிதம் கூட எழுதவில்லை எனவும் குறிப்பிட்டார்.

அத்தோடு அந்த மக்களுக்கு வெளியிலிருந்து கூட ஒரு விதமான உதவியும் செய்யவில்லை எனவும் கூறினார். ஆனால் எமது அமைப்பு நாற்பதாயிரம் சமைத்த உணவு பொட்லங்களை வழங்கியதோடு அம்மைநோயினால் பாதிப்புக்கு உள்ளான பத்தாயிரத்துக்கு மேற்பட்ட நோயாளர்களுக்கு பால்கஞ்சியும் பழங்களையும் வழங்கினோம் எனவும் தெரிவித்தார்.

நடந்து முடிந்த யுத்தத்தின் போது தமிழமக்களுக்கு ஒரு அநிநீதி இழைக்கபட்டுள்தை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். ஆனால் அரசாங்கம் அதை யாழ்ப்பாணம் மாநகரசபை வவுனியா நகரசபை தேர்தலில் ஏதே ஒருவகையில் வெற்றிபெற்று நியாயபடுத்துவதற்க்காக முயற்சி செய்வதாக தெரிவித்தார். ஜனாதிபதி தமிழ் மக்களுக்கான சமஸ்டி முறையிலான ஒரு தீர்வை நோக்கி செல்லமாட்டார் எனவும் ஆனால் 13வது திருத்தசட்ட மூலம் அதிகார பகிர்வினை செய்வதற்கு அவரின் கட்சியில் உள்ள முற்போக்கு சிந்தனையாளர்களின் நெருக்குதல் காரணமாக முயற்சி செய்யலாம் எனவும் தெரிவித்தார்.

தமிழர் விடுதலை கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி ஆகிய கட்சிகளுடன் தாம் இணக்கபாட்டுடன் செயற்படுவதாக தெரிவித்த அவர், வவுனியாவில் உள்ள தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர் ஓருவர் கட்சியை விட்டு வெளியேறி அரசு ஆதரவாக செயற்படுகிறார். ஆனால் ஏனைய தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினார்கள எம்முடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தமிழ் ஈழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும் முன்னால் வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ரிபிசியில் சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்

Read more...

கையடக்கத் தொலைபேசி வடிவில் துப்பாக்கி! பாதுகாப்புத் தரப்புக்கு எச்சரிக்கை!!

கையடக்கத் தொலைபேசி வடிவத்தில் புதிய ரகத் துப்பாக்கிகள் உலக சந்தைக்கு வந்துள்ளதால் பாதுகாப்புப் பிரிவினர் எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது. கையடக்கத் தொலைபேசி வடிவத்திலும் அதன் அளவிலும் புதிய ரக துப்பாக்கிகள் உலகச் சந்தைக்கு வந்துள்ளன. அவை விரைவில் இலங்கைக்கும் கொண்டுவரப்படலாம். எனவே பாதுகாப்புப் பிரிவினர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பாதுகாப்பு மேலும் தெரிவித்துள்ளது.

இந்த துப்பாக்கி 0.22 மில்லிமீற்றர் வகை துப்பாக்கி ரவைகளைக் கொண்டுள்ளது. இதற்கு நான்கு ரவைகள் பயன்படுத்தப்படுகின்றன. தொலைபேசியில் உள்ள ஒரு இலக்கத்தை அழுத்துவதன் மூலம் துப்பாக்கி இயக்கப்படுகிறது. ரவைகள் துப்பாக்கியின் முன்பகுதியால் வெளியேறும் தன்மை கொண்டது எனவும் தெரிவித்துள்ளது.

இந்த வகை துப்பாக்கிகள் பிரித்தானியாவின் சந்தைகளில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அறியப்படுகிறது.

துப்பாக்கியின் இயக்கம் மற்றும் வடிவமைப்பு வீடியோ காட்சிக்கு இங்கு அழுத்தவும்.




Read more...

இலங்கையில் புதிய இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகம். -அமைச்சின் செயளாளர்-

1972ம் ஆண்டிலிருந்து பாவனையில் இருக்கும் அடையாள அட்டைக்கு பதிலாக புதிய இலத்திரனியல் அடையாள அட்டை இவ்வாண்டு டிசம்பரில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்ப்படுகின்றது.

இது தொடர்பாக உள்நாட்டு நிர்வாக அமைச்சின் செயலாளர் டாக்டர் உபநந்த விதானபத்திரன கருத்து தெரிவிக்கையில், புதிய இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகம் செய்வதற்கான கேள்விதாரர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதற்கமைய இவ்வாண்டு டிசம்பரில் புதிய இலத்திரனியல் அடையாள அட்டை பாவனைக்குவரும் என தெரிவித்தார்.

ஆரம்பத்தில் இத்திட்டம் உலகவங்கியின் நிதிஉதவியுடன் மேற்கொள்ளுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அதில் ஏற்பட்ட தாமதத்தினால் தற்போது இலங்கை அரசே அதற்கான முழு செலவாகிய 480 கோடி ரூபாவையும் ஏற்றுக்கொண்டுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்படும் இலத்திரனியல் அடையாள அட்டையானது முற்றுமுழுதாக கணணி மயப்படத்தப்பட்டு உறுதிப்படுத்தல் அத்தாட்சிக்காக மத்திய தரவுத்தளத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த அடையாள அட்டையில் குறிப்பிட்ட நபரின் தனிப்பட்ட தகவல்கள் சிங்களம் தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் குறிப்பிடபட்டிருப்பதுடன் குறிப்பிட்ட நபரின் கைரேகை பிரதியும், புகைப்படமும் இணைக்கப்பட்டிருக்கும்.

இவ்வடையாள அட்டைக்கு பொதுமக்களிடம் இருந்து அறவிடப்படும் தொகை இன்னும் தீர்மானிக்கப்பட வில்லை என தெரிவித்த செயளாலர் இந்த இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகம்படுத்தம்பட்டதன் பின்னர் தற்போது பாவனையில் உள்ள அடையாள அட்டை 2015 ம் ஆண்டு பாவனையில் இருந்து முற்றாக அகற்றப்படும் என தெரிவித்தார்.

Read more...

Sunday, July 26, 2009

இந்தோனேசியாவில் 19 இலங்கையர்கள் கைது.

இங்கையில் இருந்து வெளியேறி ஐக்கிய நாடுகளை சபையின் அகதிகளுக்கான உயரித்தானிகம், லம்போக் இல் தங்கியிருந்த இலங்கை இளைஞர்கள் 19 சட்டவிரோத குடியேற்ற விதிகளுக்கமைய இந்தோனேசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயரிஸ்தானிகத்தில் இருந்து தப்பி ஓட முற்பட்டதாக கூறப்படுகின்றது.

இக்கைது கடந்த சனிக்கிழமை இடம்பெற்றதாக தெரிவித்துள்ள பென்குளு நகர பொலிஸ் பிரதம அதிகாரி Jhony Tri Satria மேலதிக தகவல்கள் எதையும் வெளியிட முடியாது என தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஆறுமுகம் சுசிகரன், மகேந்திரன் வர்ணன், சுப்ரமணியம், சோமசுந்தரம் விஜயராஜ், வேதநாயகம் ரெனோல்ட், தைகைவடிவேல் பகிரதன், குலசேகரம் சிறிஸ்வரன் ஆகிய எழுவரது பெயர் வெளியிடப்பட்டுள்ளது.

Read more...

இலங்கை-இந்திய பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை விரைவில் ஆரம்பம்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள்கப்பல் போக்குவரத்து சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற போக்குவரத்து அமைச்சர்களின் பிராந்திய ஒத்துழைப்புக்கான சார்க் மகாநாடடில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்குமுன்னர் இடம்பெற்ற பிராந்திய மாநாடுகளில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள்கப்பல் போக்குவரத்து சேவை தொடர்பாக ஆராயப்பட்டாலும் உள்நாட்டுயுத்தம் காரணமாக அச்சேவைக்கு இணக்கம்காணப்படவில்லை. ஆனால் யுத்தம் முடிவடைந்த நிலையில் கொழும்பிலிருந்து கொச்சினுக்கு பயணிகள்கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிப்பதற்கு இந்தியா பூரண இணக்கம் தெரிவித்ததுடன் இப்பயணிகள் போக்குவரத்து சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை முயற்சி செய்த மாணவி மரணம்.

கொழும்பு பிரபல பாடசாலை ஒன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது ரையினால் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த கவந்தியா ஜெயவர்த்தன எனும் 9ம் வகுப்பு மாணவி நேற்று பிற்பகல் வைத்தியசாலையில் மரணம் அடைந்துள்ளார்.

பாடசாலையில் கையடக்க தொலைபேசியை பாவித்த நான்கு மாணவிகளை மாணவ தலைவி அதிபர் முன்நிறுத்தியபோது, அதிபரிடம் சிறு இடைவெளியை பெற்றுக்கொண்டு மலசல கூடத்திற்கு சென்று தனது ரையினால் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்திருந்தார்.

Read more...

பேருவல பிரதேசத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரு முஸ்லிம் மதக்குழுக்களுக்கிடையில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட மோதலின் பின்னணியில் உருவாகியுள்ள பதட்ட நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமுகமாக பேருவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில பிதேசங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

மஹாகொட, பேருவல-மரதான, மற்றும் ஹெட்டிமுல்லைப் பிரதேசங்களிலேயே அவ்வாறு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Read more...

ஊவா மாகாணத்தில் ஜே.வி.பி.க்கு பலத்த அடி


ஊவா மாகாண தேர்தலுக்கான வாக்குவேட்டையில் ஈடுபட்டுள்ள இனவாத கட்சியான ஜே.வி.பி.யினர் மீது தொடர்ந்தும் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாக தெரியவருகின்றது.
ஜே.வி.பியின் தேர்தல் அலுவலகங்கள் தீவைக்கப்படுவது, தாக்கப்படுவது மற்றும் அச்சுறுத்தல் விடுப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் பிரதிப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜே.வி.பி.யின் ஊவா மாகாண முதலமைச்சர் வேட்பாளர் ஆர்.எம். ஜயவரத்னவிடம், சிங்கள நாளிதழான ராவய தொடர்புகொண்டு கேட்டபோது, இவ்வாறான 28 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகக் கூறினார்.

இதுதொடர்பாக மொணராகல மாவட்டத்தில் அதிக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்த அமைப்பு மேலும் தகவலளித்தது.


Read more...

Saturday, July 25, 2009

புலிகளின் மூத்த ஊறுப்பினர் ஒருவர் காடுகளில் மறைந்திருந்து சரண்.

கடந்த மே மாதம் 16ம் திகதிவரை வெள்ளாமுள்ளி வாய்காலில் இருந்து சண்டையிட்டு ஓருவாறு தப்பி காடுகளினுள் நுழைந்து கொண்ட புலிகளின் மூத்த உறுப்பினர் ஒருவர் கடந்த புதன் கிழமை இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ அதிகாரி ஒருவர் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார்.

அ0024 எனும் தகட்டு இலக்கம் கொண்ட மேற்படி உறுப்பினர் கங்கா எனும் பெயர் கொண்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவராகும். 1983ம் ஆண்டில் இருந்து 26 வருடங்கள் புலிகளியக்கத்தில் இருந்துள்ள அவர் அவ்வியக்தத்தில் பல பிரதான பொறுப்புக்களில் இருந்துள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டு கிழக்கிலங்கையில் இருந்து புலிகள் படையினரால் விரட்டியக்கப்படும்போது கீர்த்தி குழுவினருடன் வன்னி செல்லும்வரை, அவர் மட்டக்களப்பு வழங்கல் பிரிவிற்கு பொறுப்பாக இருந்ததாக படையினரின் விசாரணைகளின்போது தெரிவித்துள்ளார்.

வன்னியில் ஜெயந்தன் படையணியின் தளபதிகளில் ஒருவராக செயற்பட்டுள்ள இவர் தனது குழு ஒன்றுடன் மட்டக்களப்பு செல்ல முற்றப்பட்டபோது, இடைவெளியில் எதிர்கொண்ட படையினருடன் ஏற்பட்ட மோதலில் அக்குழுவில் இருந்த அனைவரும் இறந்துவிட்டதாகவும், தான் காடுகளில் ஒழிந்து கொண்டாதாகவும் தெரிவித்துள்ளார்.

விசுவமடு பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாம் ஒன்றிற்கு வெள்ளை நிறம்போன்று துணித்துண்டொன்றை உயத்தியவாறு சென்று சரணடைந்துள்ள மேற்படி நபர், கடந்த சுமார் 50 நாட்களாக சமைத்த உணவேதும் கண்ணால் கூட கண்டிராத நிலையில் ஆங்காங்கே கிடைத்த வாழைக்காய், வத்தாளைக்கிழங்கு மற்றும் கிடைக்கப்பெற்ற காய்வகைகளை உண்டு காலத்தை கழித்துள்ளதாக தெரியவருகின்றது.

புலிகளியக்கத்தில் எஞ்சியுள்ள மூத்த உறுப்பினராக இவர் கருதப்படுகின்றார். அதேநேரம் இவ்வாறு காடுகளில் எஞ்சியுள்ள ஒருசிலரும் இவ்வாறு சரணடைந்துவருகின்றனர் என அவ் அதிகாரி மேலும் கூறினார்.

Read more...

இன ஒற்றுமையும் இடம் பெயர்ந்தோர்களின் குடியேற்றமும். (புரட்சிதாசன் அஹமட்)

போரியலுக்கு பிரியாவிடை கொடுத்து சமூக, இன ஒற்றுமைக்கு கை கொடுக்கும் இந்த வரலாற்று நினைவு தினத்தில் நாம் எவ்வாறு எமக்குள் இன ஒற்றுமையை வலுப்படுத்தப் போகிறோம் என்பதுதான் அடுத்த பிரதான கேள்விக்கணையாக எம் அனைவரின் உள்ளக்கிடக்கையிலிருந்து வரும் பாரிய ஒரு பெரு மூச்சாக இருக்கிறது. இதற்கு ஒரு சிறந்த விடை காண வேண்டியது எமது நாட்டில் வாழ்கின்ற அனைத்துச் சமூகத்தினரதும் பிரதான கடமையாகும்.

எமது திரு நாட்டில் வாழ்கின்ற அனைத்து இன சமூகங்களும் தங்களது மதங்களையும், வரட்டு சுபாவத்தையும் மறந்து நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள் ஒரு நாட்டுப்பிள்ளைகள் எனும் இந்த உயரிய சிந்தனையில் ஒன்றுபட வேண்டும். இதற்கென பல தியாகங்கள் செய்வதற்குத் துணிவுடன் செயற்பட வேண்டும். அப்போதுதான் உண்மையான போரியல் வெற்றியை நாம் சுவாசிக்க முடியும். இதுவே யதார்த்தமுமாகும்.

1956 ம் ஆண்டிற்குப் பின்னர்தான் இலங்கையில் இனவாதம் பிறந்தது என்று கூறலாம். திரு. எஸ்.டபிள். யூ பண்ணடாரநாயக்கா தனது சுய நலத்திற்க்காகவும், தான் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்ற அந்த குறுகிய நோக்கத்திற்காகவும் முழு நாட்டையும் இரத்தக் களரியாக்கிவிட்டு கேவலம் ஈற்றில் தன்னினத்தால் தான் சுட்டுக் கொல்லப்படடார். என்பது யாவரும் அறிந்த வரலாறு ஆகும்.

இவ்வாறான தூர நோக்கற்ற அரசியல் வாதிகளின் சுய நல அரசியல் நாடகங்களால் தொடர்ந்து இனவாதம் வளர்க்கப்பட்டு வந்ததன் காரணமாகவே நமது திருநாட்டில் இந்தப் பயங்கரவாதம் பூதாகரமாக உருவெடுத்து பெரும்பான்மைச் சமூகத்தில் பல சமத்துவவாதப் பிரதிநிதிகள் இவ்வாறான குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி தொடர்கூட்ங்களையும், கருத்தரங்குகளையும், விழிப்புணர்வுக் கூட்டங்களையும், அறிக்கைகளையும், விடுத்தும் கூட ஈற்றில் இவர்களது போராட்டம் வெற்றி பெற்ற வரலாறு முயற்கொம்பாகவே இருந்தது என்பதனை இவ்வையகமே அறியும்.

சமூகச்சீர்திருத்தவாதிகளின் நற்சிந்தனாசக்தி பாழடைந்த நிலையில் தோற்றமடைந்தமைக்குப் பிரதான காரணங்கள் பெரும்பான்மை இனத்தவர்களின் இனவாதக்கட்சியின் தோற்றமேயாகும். இரண்டு மொழிகள் பேசப்படுகின்ற இந்த திருநாட்டில் இனத்துவேசமும், பிரிவினைவாதமுமே மேலோங்கித் தாண்டவமாடி நிற்பதற்கு இந்த இனத்துவேசக் குழுக்களின் செயற்பாடே காரணமாகும்.

ஒரு நாடு பிற்போக்கான நினைக்குத் தள்ளப்படுவதற்கு பிரதான காரணம் பிரிவினை வாதமும், இனவாதமும்தான் முன்னிலை வகிக்கிறது எனலாம். அந்த வகையில் உலகில் இலங்கை 22 இடத்தினைப் பிடித்துள்ளது. இதனை அறியாதவர்கள் மிகவும் அரிது.

தற்போது யுத்தத்தின் ஓய்வு எல்லோரையும் ஒரு கனம் சிந்திக்க வைக்கின்றது. இச்சிந்தனையை நாம் முப்பத்திரெண்டு ஆண்டுகளுக்கு முன் சிந்தித்து இருந்தால் எவ்வளவு விபரீதங்களையும், நட்டங்களையும், உயிரழிவையும், பொருளாதார பின்னடைவுகளையும், அபிவிருத்தியின்மைகளையும் தடுத்திருக்க முடியும் என்பதனை நாம் அனைவரும் நமக்குள் கேள்வி கேட்டு அதற்குரிய பதிலையும் பெற்றுக் கொள்ளலாம்.

உலகில் உள்ள அனைத்தும் அழிந்து விடும், அன்பு ம்டடும் உயிர் வாழும் எனும் உயரிய தத்துவத்திற்கேற்ப நாம் அனைவரும் செயற்பட வேண்டும். அப்போதுதான் நாம் எமது இழய சந்ததியினருக்காவது ஒரு விடிவினையும், நல் வழியினையும் காட்டியவர்களாக மரணிக்க முடியும். இதற்காக நாம் அனைவரும் இன, மத, நிற, குல பேதங்களை மறந்து ஒரு தாய் பெற்ற சகோதரர்கள் போல கைகோர்த்து ஒற்றுமையுடன் வாழப் புரிந்து கொள்ள வேண்டும். இனிமேலாவது இன ஐக்கியத்தைக் கூறுபோடுவதற்கு முனைகின்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு சாவு மணி அடிக்க முற்படல் வேண்டும். அப்போதுதான் நமது ஒற்றுமை எனும் அந்த பசுமை புத்தெழுச்சி பெறும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

பௌத்த தர்மம் கூறுகின்ற அந்த மனிதாபிமான காருண்யம் காத்திரமாகப் பாதுகாக்கப்படல் வேண்டும். இனிமேல் எந்தச் சந்சர்ப்பத்திலும் அடாவடித்தனம், அட்டூழியம், இனவாதம், பிரிவினைவாதம். மொழிவாதம் போன்றவைகளைச் சிறுபான்மையினருக்கு எதிராகச் செயற்படுத்த அனுமதியளிக்கப்படக்கூடாது. இதற்குச் சிறந்த உதாரணமாக விட்டுக்கொடுக்கும் தன்மையினையும். புரிந்துணர்வுத் தன்மையினையும் நாம் உதாரனமாகக் கூறலாம்.

தற்போது யுத்தத்தின் தோல்வியில் துவண்டு கிடக்கும் தமிழ் பயங்கரவாதிகளும், அப்பாவித் தமிழ் மக்களும் இனிமேலும் தங்கள் பிரிவினைவாதப் போக்கினைக் கடைப்பிடிக்காத வகையில் அவர்களை நாம் வழிநடாத்த முற்படல் வேண்டும். தற்போது இவர்கள் துன்பித்தும், குற்ற உணர்வாலும் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் இரு அன்புக் கரங்களையும் நீட்டி அவர்களுக்கு உதவி செய்ய முற்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்களது பகைமைத் தன்மையினையும் குற்ற உணர்வினையும் தன்னகத்திருந்து விலக்களிப்பார்கள் என்பது திண்ணம்.

ஒரு இனம் துன்பப்படும் போது மற்ற இனம் குதூகலமாக இருப்பது பெளத்த தர்மத்திற்கே பொருந்தாத ஈனச் செயலாகும் என்று பௌத்த தர்மம் எச்சரிக்கை செய்கின்றமையினை பெரும் பான்மைச் சமூகம் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். மானிடம் வாழ்கின்ற இந்த வையகத்தில் மக்கள் வாழ வழிவகை சமைக்க முற்படக் கூடாது.

இன்று ஒரு வேளைச் சோற்றுக்கே நீண்ட வரிசையில் வயது வித்தியாசமின்றி பாத்திரமேந்தி கொட்டும் வெயிலில் கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கும் கொடுமையினை நாம் நாளாந்தம் நேரிலும், ஊடகங்களிலும் பார்த்த வண்ணமிருக்கிறோம். இந்தக் கதியில் வாழ்கின்ற இந்த மககளுக்கு நாம் என்ன செய்ய முடியும்? அவர்களது பசியினை எவ்வாறு போக்கலாம்? அவர்களை எப்படி பழைய நிலைக்குக் கொண்டு போகலாம்? என்ற சிந்தனையில் நாம் வாழ வேண்டும். இனிமேலாவது நாம் ஒற்றுமை எனும் அந்தக் கயிற்றைப் பலமாகப் பற்றிப் பிடிக்க முற்படுவோம், ககோதரர்கள் போல் வாழப் பழகிக் கொள்வோம்.

இன்று சுமார் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவிப் பொது மக்கள் மிகவும் கொடிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு திறந்த வெளிச் சிறைகளில் சிதறி வாழ்கின்றனர். இவர்களது சொந்த இடங்களுக்கு மீண்டும் மீளவும் குடியமர்த்துவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். வடக்கின் வசந்தம் எனும் அந்த ஆறு மாத காலத்திற்குள் குறிப்பிட்டவர்கள் குறிப்பிட்ட இடங்களில் வாழ்வதற்குரிய வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள முனைப்புக் காட்ட வேண்டும். நொந்து போன உள்ளங்களுக்கும் ஊனமுற்ற உடல்களுக்கும் சிறந்த மருந்தினை நாம் வழங்க வேண்டும்.

இன்று இலங்கையில் சேவை புரிகின்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்குரிய கட்டுப்பாடுகளைத் தளர்த்தி அவர்களின் உதவிகளை நாம் பெற்றுக் கொள்ள முற்படல் வேண்டும். அதிகாரத் திணிப்பினை அகற்றி அன்பு வலையினை வீசி அவசரமாக அவர்களுக்கு இருப்பிடங்களையும் நிரந்தரமாக நிம்மதியுடன் வாழ்வதற்குரிய தொழில்படிப்பினையும் பெற்றுக்கொடுக்க முற்பட வேண்டும்.

யுத்தத்தில் வெற்றி பெற்ற இறுமாப்பினைத் தவிர்த்து இருண்டு போன அந்த அப்பாவித் தமிழ் மக்களுக்கு நல்ல வழியினையும், உபதேசத்தினையும் வழங்கி அவர்களின் வாழ்க்கைக்கு ஒளியூட்ட வேண்டும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்த தமிழ் மக்களைப் பற்றி விமர்சனம் செய்வதினைத் தவிர்த்து எதிர்காலத்தில் அவர்கள் எவ்வாறு வாழ வேண்டும்? அவர்களுக்குரிய அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறதா? அதனை எவ்வாறு சரி செய்வது? போன்ற விடயங்களில் அரசு மிகவும் ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும்.

இனிமேலாவது இந்நாட்டில் தமிழ் மக்கள் இரண்டாம் தர மக்களாகவும் முஸ்லிம்கள் மூன்றாம் தர மக்களாகவும் கிறிஸ்தவர்கள் நான்காம் தர மக்களாகவும் நடத்தப்படக்கூடாது. எல்லோரும் முதலாம் தர மக்களே எனும் அந்த உயரிய அந்தஸ்தால் மதிக்கப்பட வேண்டும். இதனை அரசியலமைப்புச் சட்டத்தால் மாற்றம் செய்ய வேண்டும். இலங்கைத் திருநாட்டில் பிறந்த எல்ரோரும் முதலாம் தரப் பிரஜையே என்ற அந்த கோட்பாடு முதன்மைப்படுத்தப்பட வேண்டும்.

இடம் பெயர்ந்து அல்லலுறும் இந்த அநாதை ஜீவன்கள் மேலும் துன்பத்தாலும், இடரினாலும் சிக்கித் தவிக்காமல் அவர்களைத் தங்களது சொந்த இடங்களுக்கு மீளக்குடியமர்த்த அரசு துரித நடவடிக்கையினை மேற்கொள்வதுமே காலத்தின் தேவையாக இருக்கிறது.

1977 முற்பகுதியில் இருந்த அந்த தொலைந்து போன ஒற்றுமை 2009 திலிருந்து புதிய பரிணாமப்படுத்தப்படல் வேண்டும். அப்போதுதான் நாம் இழந்து போன அந்த ஒற்றுமையினையும், ஐக்கியத்தினையும் மீளப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.

வட கிழக்கு மாகாணத்தில் புலிப் பயங்கரவாதிகளின் கட்டுப்பாடடின் கீழ் நிர்வகிக்கப்பட்ட சகல பிரதேசங்களும் தற்போது அரசாங்கத்தின் கட்டமைப்புக்குள் வந்துள்ளது. இவைகள் தற்போது பாழடைந்த, பசுமையற்ற, பாலை வனங்களாகவே காட்சி தருகிறது. இச் சோபனையிழந்த பிரதேசத்தை மீழவும் புணரமைத்து இதிலிருந்து இடம் பெயர்ந்த மக்களைக் குடியமர்த்தி பசுமைப் புரட்சியினை ஏற்படுத்த அரசாங்கம் தன்னால் முடியுமான சகல வழங்களையும் பாவிக்க வேண்டும்.

மீள் குடியேற்றம் இடம் பெறுகின்ற இப்பிரதேசம் ஒரு ஊழலற்ற பொது நலம் பேணக்கூடிய குறிப்பிட்டவர்களின் நிர்வாகத்தில் நடை முறைப்படுத்தப் படுமாயின் வீண் விரயத்தையும், ஊழல் மோசடிகளையும் கட்டுப்படுத்த முடியும். எல்லோரும் இப்போது விரும்புவது அமைதியான வாழ்க்கையில் சமாதானமான சுவாசக்காற்றைச் சுவாசித்து நிம்மதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ்வதையுமேயாகும்.

Read more...

கிழக்கின் பட்டதாரிகளை பிரிவினைவாதம் ஒன்றை நோக்கி தள்ளாமல் வேலையில்லாப் பிரச்சினையைத் தீருங்கள்- ஜேவிபி

கடந்த 22 நாட்களாக மட்டக்களப்பு நகரப்பகுதியில் உண்ணாவிரதம் இருந்துவரும் 1700 வேலையில்லாப் பட்டதாரிகளது விடயம் தொடர்பாக கடந்த 23ம் திகதி பாராளுமன்றில் விசேட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து பேசிய ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க, கிழக்குமாகாணத்தை சேர்ந்த வேலையில்லாப் பட்டதாரிகளது பிரச்சினையை தீர்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரசு உடனடியாக ஆணையிடவேண்டும் என தெரிவித்துள்ளார்.

அவருடைய அறிக்கையில், கிழக்கு மாணவர்கள் வேலைவாய்ப்பையே கேட்கின்றனர். அவர்கள் தனி ஈழம் கேட்கவில்லை. அவர்களுடைய பிரச்சினை கடந்த மூன்று ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ளது. இவற்றுக்கு எதிராக ஹர்த்தால், சத்தியாகிரகம் என செய்துவந்த அவர்கள், அரசு அவற்றிற்கு நடவடிக்கை எடுக்கத் தவறியதால் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர். அம்மாணவர்கள் ஏனைய பிரதேசங்களில் உள்ள மாணவர்கள் போல் வேலைவாய்பை பெற்றுக்கொள்ள தகுதியுடையவர்கள் என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

20 லட்சம் நஸ்டஈடு கோரும் இடைத்தங்கல் முகாம் மக்கள்.

இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை அவர்களின் விருப்பிற்கு மாறாக தடுத்து வைத்திருப்பது அடிப்படை உரிமை மீறல் செயல் எனக்கூறி இலங்கை மேல் முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உயிலங்குளத்தில் உள்ள வீரபுரம் எனப்படும் இடைத்தங்கல் முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குடும்பம் ஒன்றின் உறவினர்களே மேற்படி வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.

கோவில் குளம் இந்துக்கல்லூரி இடைத்தங்கல் முகாம் பொறுப்பதிகாரி உட்பட 9 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன் உள்நாட்டு யுத்தத்தில் தற்காலிமாக இடம்பெயர்ந்தோர், அவர்களது விருப்பிற்கு மாறாக தடுத்து வைத்து வைக்கப்படுதல் உரிமை மீறல் செயலாகும் எனவும் அவர்கள் தாம் விரும்பிய இடம் ஒன்றில் வாழும் பொருட்டு அவர்களை விடுதலை செய்ய நீதிமன்று உத்தரவிட வேண்டும் எனவும் அம் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் உரிமைகள் மீறப்பட்டமைக்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு 20 லட்சம் ரூபா நஸ்டஈடு வழங்க வேண்டும் என மன்று ஆணையிட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

Read more...

50 கோடி ரூபா பெறுமதியான மருந்து பொட்களை அழிக்க நேரிட்டுள்ளது.

இரத்தமலானையில் உள்ள அரச மருந்தக களஞ்சியத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள 14 கொள்கலன் தரக்குறைவானதும், காலாவதியாகும் நிலையில் உள்ளதுமான மருந்துப்பொருட்கள் அழித்தொழிக்கப்பட உள்ளதாக தெரியவருகின்றது.

50 லட்சம் பெறுமதியான இம்மருத்துப் பொருட்களை இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள மிதமிஞ்சிய தரகு வேலைகளால், தரக்குறைவான இம் மருந்துப்பொருட்களை வினியோகித்த நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத நிலை தோன்றியுள்ளதாக அகில இலங்கை சுகாதார சேவைகள் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் திரு. காமினி குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

ஓப்பந்தத்தின் அடிப்படையில் காலாவதியாகும் அல்லது பழுதடையும் மருந்துப்பொருட்களுக்கு நஸ்டஈடோ அன்றில் மீழ் நிரப்பலோ பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் சுகாதார அமைச்சு இழப்பீட்டை பாரமெடுத்துக்கொள்ள நேரிட்டுள்ளது. அதேநேரம் இந்நிலைமையால் அரச வைத்தியசாலையில் மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

12 ஆபாச இணையத்தளங்களை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவு.

இலங்கையில் இருந்து செயற்படும் 12 ஆபாச இணையத்தளைங்களை இடைநிறுத்துமாறு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதவான் நிஸாந்த கப்பு ஆராச்சி இலங்கை தொலைதொடர்பு திணைக்களத்தின் இயக்குனர் நாயகத்திற்கு ஆணையிட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுப் பிரினர் இது தொடர்பாக நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன், இவ் இணையங்களில் இலங்கைப் பெண்கள் மற்றும் குழந்தைகளது அபாசப்படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் அவை சமூகசீரழிவுக்கு வழிவகுப்பதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன் இவ்வாறான இணையங்களை நிர்வகிப்பது இலங்கை குற்றவியல் கோவையின் இலக்கம் : 1983 இன் 22 பிரிவின் கீழ் கிறிமினல் குற்றமாகும் எனவும் தெரியப்படுத்தினர்.

இது தொடர்பாக இணையத்தள உரிமையாளர்கள் பதிலளிப்பதற்கு எதிர்வரும் மாதம் 7ம் திகதி வரை கால அவகாசம் வழங்குமாறு தெரிவித்த மஜிஸ்திரேட் அவ்வாறு அவர்கள் செய்யாக பட்சத்தில் நிரந்தரமாக நிறுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.

Read more...

பேருவல பிரதேசத்தில் முஸ்லிம் பள்ளிவாசலுக்கு தீமூட்டப்பட்டுள்ளது. இருவர் பலி.

பேருவல பிரதேச்தில் உள்ள இரு முஸ்லிம் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 9 பேர் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவத்தின் போது பள்ளிவாசல் ஒன்று தீமூட்டப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைக்கும் படையினர் தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.

மோதலுக்கான காரணம் சரியாக வெளிவரவில்லை. முழுமையான விபரங்கள் சற்று நேரத்தில் வெளியிடப்படும்

Read more...

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்பு. காமுகன் அடித்துக்கொலை.

மத்திய முகாம் பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது மாணவி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்து கொலை செய்த நபரை பிரதேச மக்கள் அடித்துக்கொலை செய்துள்ளனர். மாணவியை கொலைசெய்து அவரது உடல்மீது பாறாங்கல் ஒன்றை ஏற்றி வைத்துவிட்டு தலைமறைவாகியிருந்த மேற்படி நபர் அப்பிரதேச்தில் இருந்து தப்பிச் செல்வதற்காக முயற்சித்தபோது பிரசேத்தில் உள்ள தமிழ்-சிங்கள மக்களால் இனங்காணப்பட்டு அவ்விடத்திலேயே அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கொலை செய்யப்பட்டிருந்த மாணவி மோகன் மதுனிஸ்காவின் இறுதி நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான தமிழ்-சிங்கள மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Read more...

Friday, July 24, 2009

லசந்த கொலைச்சந்தேக நபருக்கான விளக்க மறியல் தொடர்கின்றது.

லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருந்து கொலைசெய்யப்பட்ட லசந்த விக்ரமதுங்கவின் கையடக்க தொலைபேசியை வைத்திருந்ததாக கைதுசெய்யப்பட்டுள்ள நபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்கிசை நீதிமன்றில் லசந்த கொலைவழக்கு விசாரணைக்கு வந்தபோது லசந்தவின் உரிமைகள் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள், பொலிஸார் வழக்கு விசாரணையில் ஆர்வம் காட்டவில்லை என தெரிவித்ததுடன், விசாரணையை பிறிதொரு பொலிஸ் பிரிவினரிடம் கையளிக்குமாறும் வேண்டியிருந்தனர்.

விடயங்களை நன்கு செவிமடுத்த நீதிபதி விசாரணைகளை துரிதப்படுத்தி மன்றிற்கு விடயங்களை தெரியப்படுத்தும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

Read more...

கருணாவின் ஆடக்களின் எல்லை கடந்த அத்துமீறல் : ஊடகவியலாளருக்கு மிரட்டல்.

அண்மையில் சேவாலங்கா எனும் அரசசார்பற்ற நிறுவனத்தினால் மக்களுக்காக வழங்கப்பட்ட இரு கூலர்வண்டிகள் தொடர்பான செய்தியொன்று இணையத்தளங்களில் வெளியானதை தொடர்ந்து அச்செய்தியை வெளியிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கருணா தரப்பினர் ஊடகவியலாளர் ஒருத்தருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர்.

ஊடக சுதந்திரத்தினை அனைத்து மக்களும் தங்கு தடையின்றி சுதந்திரமாக அனுபவிக்கக்கூடிய சுவிற்சர்லாந்து நாட்டில் வசிக்கும் குறிப்பிட்ட ஊடகவியலாளரை அமைச்சர் முரலிதரனின் ஊடகச்செயலாளர் எனப்படும் யூலியன் என்பவர் 0094777869767 எனும் தொலைபேசி இலக்கத்தில் இருந்து தொடர்பு கொண்டு விடுத்திருக்கும் அச்சுறுத்தலின் ஒரு தொகுதி பிரசுரமாகியுள்ளது.

கடந்த 30 வருடகாலம் இலங்கைத் தீவை பயங்கரவாதம் ஆட்கொண்டிருந்தபோது இருந்திராக ஊடக அச்சுறுத்தல் இன்று கருணாவின் ஆட்களால் அரங்கேற்றப்பட்டு வருவதுடன் அந்த ஜனநாயக விரோதச் செயலானது இன்று நாடுகடந்தும் அரங்கேற்றப்பட்டுவருகின்றது.

சமுதாயத்தில் தவறொன்று நடக்கின்றபோது சுட்டிக்காட்டத் தவறுகின்ற ஊடகவியலாளன், ஊடக தர்மத்திற்கு சாவு மணி அடித்தவனாக கருதப்படுவான். ஆனால் ஊடக சுதந்திரம் எனும்பெயரால் ஊடகவியலாளன் ஒருவன் தவறான செய்திகளை பரப்புவானாயின்,, குறிப்பிட்ட செய்தி தொடர்பான தமது தரப்பு நியாகங்களை கருத்துக்களால் எதிர்கொள்வதை விடுத்து ஊடகவியலாளர்களின் குரல்வளையை அடாவடித்தனங்களால் நசுக்க முயற்சிப்பது ஜனநாயக நாடொன்றின் நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும்.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தலானது முடிவுக்கு வரவேண்டும் என்பதற்காகவும் நாட்டில் தான்தோன்றித்தனமாக குட்டிப் பஞ்சாயம் நாடத்துவோரது அடாவடித்தனங்கள் அரசினதும் மற்றும் அனைவரினதும் காதுகளில் ஒலிக்கவேண்டும் என்பதற்காகவும் இவ்விடயம் அம்பலத்திற்கு வருகின்றது.

ஒலிப்பதிவில் உள்ள தகாத வார்த்தை பிரயோகங்களையும் பொருட்படுத்தாமல் இவற்றை பிரசுரித்ததற்கான காரணம் வன்செயல்கள் ஒழிக்கப்படவேண்டும் என்பதாகும்.

ஒலிப்பதிவைக் கேட்க

Read more...

ஐ.தே.க எம்பி ஒருவர் கட்சியில் இருந்து விலகுவதாக எச்சரிக்கை.

ஐக்கிய தேசியக் கட்சி எனைய கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து முன்னணி ஒன்றை அமைக்கும் போது கட்சியின் யானைச்சின்ன விடயத்தில் விட்டுக்கொடுப்புச் செய்தால் தான் அரசியலில் இருந்து இராஜினிமா செய்து கொள்ளப்போவதாக பதுளை மாவட்ட ஐ.தே.கட்சி பாரளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனவிரத்தன தெரிவித்துள்ளார்.

Read more...

Thursday, July 23, 2009

உடத்தலவின்ன கொலை வழக்கின் குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்டிருந்தோர் விடுதலை.

உடத்தலவின்னவில் 10 முஸ்லிம்கள் சுட்டுக்கொல்லப்பட்ட கொலைவழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தோர் இன்று உச்ச நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் திகதி தேர்தல் முடிவன்று இடம்பெற்ற இச்சம்பவத்தில் குற்றவாளிகள் என கொழும்பு நீதிமன்றினால் தண்டனை வழங்கப்பட்டிருந்த இராணுவ வீரர்கள் ஐவரும் மேல் முறையீட்டு நீதிமன்றில் செய்த முறையீட்டை அடுத்து, பிரதம நீதிபதி தலைமையில் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு அவர்களை நிரபராதிகள் என விடுதலை செய்துள்ளது.

இவ்வழக்கின் குற்றவாளிகள் மீதான குற்றங்களை நிருபிப்பதற்கான சாட்சியங்கள் சந்தேசங்களுக்கு அப்பால் நிருபிக்கப்படவில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவர்கள் முன்னாள் பாதுகப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த அவர்களின் பாதுகாவலர்களாகும்.

Read more...

புலி மாஸ்டர்களான தயா, ஜோர்ச் தொடர்ந்தும் தடுத்துவைப்பு

முன்னால் விடுதலை புலிகள் இயக்க ஊடக ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர், மற்றும் அவ்வியக்கத்தின் மொழிபெயர்பாளர் ஜோர்ச் மாஸ்டர் அகியோர் மீதான விசானைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக குற்றப்புலானய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு தெரிவித்ததையடுத்து அவ்விருவரையும் தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Read more...

இரு மாணவிகள் தற்கொலை முயற்சி.

கொழும்பு பிரபல பாடசாலை ஒன்றில் 9ம் தரம் படிக்கும் இரு மாணவிகள் நேற்று தற்கொலை செய்து கொள்ள முயற்சித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, பாடசாலை மாணவிகள் நான்கு பேர் கையடக்க தொலைபேசிகளை வைத்திருந்தமை மாணவத் தலைவியால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் அறிந்த அதிபர் அவ் நால்வரையும் தமது காரியாலயத்திற்கு அழைத்தபோது சிறு இடைவெளி ஒன்றை எடுத்துக்கொண்டு மலசல கூடத்திற்கு சென்ற மாணவி 20 நிமிடங்களுக்கு மேலாக திரும்பாமையையிட்டு அப்பகுதிக்கு சென்ற பாடசாலைக் காவலாளி அம்மாணவி அங்கு தனது கழுத்தில் சுருக்கிட்டு தொங்கிகொண்டிருப்பதை கண்டுள்ளார்.

மேலுமொரு மாணவி அவ்வாறு சிற்றுண்டிச்சாலைக்குச் சென்று அங்கிருந்த போத்தல் ஒன்றை எடுத்து தனக்குதானே குத்தி காயப்படத்திக் கொண்டுள்ளார். அவ்விருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read more...

மதங்களுக்கு சேறு பூச முற்பட வேண்டாம். (புரட்சிதாசன் அஹமட்)

ஒரு மனிதனின் தனியாதிக்கம் அவன் அவன் மதங்களின் பின்னால் வழி நடப்பதாகும். இன்று உலகத்தில் மதத்தின் பால் சுதந்திரம் எல்லா சமூகத்திற்கும் உண்டு. இதில் யாரும் குறுக்கறுககவோ, தடைகள் ஏற்படுத்தவோ முடியாத விடயம். தனக்கு எது சாதகமாகத் தென்படுகிறதோ அதனைப் பினபற்றும் உரிமை எல்லோருக்கும் உண்டு. எனினும் இன்று பல கோணங்களில் இஸ்லாம் மதத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையிலும் கேடு விளைவிக்கும் வகையிலும், பிழையான வகையில் செய்திகள் பிரசுரிக்கும் வகையிலும், இழிவு படுத்தும் வகையிலும் பல இயக்கங்களும், பல சமூகத்தினர்களும் ஏன் தன்னிச்சையாகவும் செயற்படுகின்றனர்.

ஆனால் இஸ்லாமியர்கள் எந்த வகையிலும் எந்த சமூகத்தினருக்கும் ஊறு விளைவிக்க முனைவது இல்லை, மாறாக எல்லோருக்கும் உதவி புரியும் வகையிலேயே தனது காரியங்களை வழி நடாத்துகின்றனர் என்பது தெளிவான விடயமாகும்.

இன்று உலகில் முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதி என்றுதான் பொருள்படுகிறது. காரணம் அமெரிக்க ஏகாதிபத்தியம் வழங்கிய சிறப்பப் பெயராச்சே அதனால்தான் இது நீடிய ஆயுளைக் கொண்டுள்ளது. இன்று அமெரிக்கர்கள் தாடி வைக்க முடியாது தாடி வைத்தால் தீவிரவாதி, பயங்கரவாதி என்று பொருள். தாடியின் மகத்துவத்தைப் புரியாதவர்களுக்கு தாடியைப் பற்றி என்ன புரியப்போகிறது?

தாடியைப்பற்றி புனித இஸ்லாம் கூறுகிறது: என்னவென்றால் முகம் முழுவதும் நிறைந்து தாடி வைப்பது சுன்னத்தாகும். இந்த வகையில் தாடியை வைத்தால் முகம் பாதுகாப்படுகிறது. மடடுமன்றி ஜந்து நேரமும் இறைவனை வணங்க முற்படும் போது முகத்தினையும் கை கால்களையும் தண்ணீரால் சுத்தம் செய்ய சேண்டும். இவ்வாறு செய்யும் போது முகத்திலுள்ள தாடியில் தண்ணீர் தேங்கி நிற்கும், அது முகத்திற்கு குளிரூட்டிபோல் செயற்படுவது மட்டுமல்லாது தொண்டை சம்மந்தமான சகல விதமான நோய்களையும் வராமல் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இது விஞ்ஞான ரீதியான உண்மையாகும். இப்பொழுது புரிகிறதா தாடி ஏன் வைக்கப்படுகிறது என்பது. இவ்வாறான நல்ல விடயத்திற்காகவே இஸ்லாம் தாடியை அவசியமாக்கியிருக்கிறது.

இன்று தாடியை எல்லா சமூகங்களும் வைக்கின்றனர். ஆனால் எங்களுக்கு வழிகாட்டியான முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அறிவுறுத்தலின் பிரகாரமே நாங்கள் இதனை அமுல் படுத்துகிறோம். எல்வோரும் தாடி வைக்கின்றனர் ஏன் இஸ்லாமியர்களின் தாடிக்கு மட்டும் பயப்படுகின்றனர் என்பதுதான் புரியாத புதிராக இருக்கின்றது. அண்மையில் இலங்கையிளுள்ள ஒரு மலை நாட்டு தமிழ் பாடசாலையில் (பதுளை) ஒரு முஸ்லிம் ஆசிரியருக்கு புதுமையான ஒரு அனுபவம் ஏற்பட்டுள்ளது. அதாவது தாடியை எடுக்க வேண்டும் , வெள்ளிக்கிழமை ஜூம்மாவுக்குப் போகக் கூடாது என்றும் அந்தப்படசாலையின் அதிபரினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாவம் அந்த அதிபர் இலங்கையின் கல்விச்சட்டத்தில் வெள்ளிக்கிழமை முஸ்லிம் ஆசிரியர்கள் ஜூம்ஆவுக்குச் செல்வதற்காக அனுமதிக்கப்பட்டுள்ள விடயத்தையும் தாடி வைக்க முடியும் என்ற விடயத்தையும் அறியாதவர் என்று நினைக்கின்றேன்.

இதே போன்றுதான் தாளங்குடாவில் உள்ள கல்வியல் கல்லூரியில் பெண்களுக்கான ராக்கிங் வதை தமிழ் இனத்து சகோதர சகோதரிகளால் முஸ்லிம் இனத்து சகோதர சகோதரிகளுக்கு சில வாரங்களுக்கு முன்னர் இடம் பெற்றுளளது. அதாவது முஸ்லிம் சகோதரிகள் ஹிஜாப் (ஸ்காப்) பைக் களற்ற வேண்டும் என்று ஒரே பிடியாய்ப் பிடித்துள்ளார்கள். இதற்கு மறுப்புரை தெரிவித்தவர்களுக்கு சார மாறியாகவும் கண் மூடித்தனமாகவும் தாக்கியுள்ளார்கள். கேவலம் கல்வியைக் கற்று இளம் சமூதாயத்தினருக்கு அதனை மீளவும் வழங்க முற்படுகின்ற இந்த இளம் கமுதாயம் அடாவடித்தனத்திற்கும், அநாகரீகத்திற்கும் போரம் போய் விட்டதனை எண்ணி வெட்கப்பட வேண்டிய அவல நிலையில் இந்த மாணவ சமுதாயம் காணப்படுகிறது.

ராக்கிங் எனும் கேவலமான ஒரு நடைமுறையினை உயர்கல்வி நிறுவணங்களில் நடைமுறைப்படுத்தி வருகின்ற இந்த அறிவிலி மாணவர்கள் ஏனைய மதங்களிலும் தனது அத்துமீறல்களையும், அடாவடித்தனங்களையும் மேற் கொண்டு வருகின்றமை மன்னிக்க முடியாத ஒரு அபாண்டமான குற்றமாகும். இது வரையிலும் இஸ்லயமிய மாணவர்கள் ஏனைய இன மாணவர்களின் மதத்தில் ஊடுருவிய வரலாறு மிகவும் அரிது. இருந்தாலும் ஏனைய மதத்வர்கள் இஸ்லயமிய மதத்தில் அத்து மீறிய வரலாறே மிகவும் அதிகமானதாகும். இவ்வாறான சந்தர்ப்பங்கள் மீளவும் எழாமல் பாதுகாப்பது எல்லா மதத்தவர்களதும் கடமையாகும்.

மனித குலம் ஒரு கௌரவமானது, அதற்கு மானமுள்ளது என்பது எல்லோரும் அறிந்த விடயம். ஆனால் அதனை நடை முறைப்படுத்தலில்தான் சிக்கல்கள் காணப்படுகிறன. அண்மையில இடம பெற்ற அகோர யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் சகோதர சகோதிரிகளுக்கு முதன் முதலாக சமைத்த உணவு வழங்கி பசியாற்றிய மாபெரும் பெருமை இந்த காத்தான்குடி முஸ்லிம் மக்களையே சாரும் என்பதனை யாரும் மறந்து விட முடியாது.

இஸ்லாம் கூறுகிறது: பக்கத்து வீட்டார் பசித்திருக்க தாம் புசிக்கக்கூடாது என்று மறுதலை அளித்திருக்கிறது. இதனால்தான் எமது சகோதர இனம் பசியில். பட்டினியில் இருக்கக் கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காகவே அவர்கள் அதனை வழங்கி அவர்களுக்கு ஆறுதல் வழங்கினர். ஆனால் 1990 களில்யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு போன்ற இடங்களிலிருந்து நிபந்தனையுடம் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் சமூகத்திற்கு இந்தச் சகோதர இனத்தினர் எந்த உதவியையும் செய்ய முற்படவில்லை. ஒரு எதிர்ப்பு அறிக்கை கூட விட முற்படவில்லை. இவையெல்லாம் அழியாத வடுவும், வரலாறுமாக பதியப்பட்டுப்போனது.

இனங்கள் ஐக்கியமாகவும் , ஒற்றுமையாகவும் வாழ புரிந்துணர்வும் நம்பிக்ககையும் அவசியமாகும். ஒரு மனிதன் ஆபத்திலிருக்கும் போது அவனுக்கு உதவி புரிய வேண்டும். அவன் எந்த இனமாகவோ, மதமாகவோ இருக்கலாம். இதுதான் மனித தர்மமும் நேயமுமாகும். மாறாக அவன் எமது இனமும் அல்ல அல்லது எமது மதமுமல்ல என்ற நோக்கத்திற்காக அவனைக்காப்பாற்றாமல் விடுவது மனித குலத்திற்கே அவன் சாபக்கேடு. இதுதான் இஸ்லாம் கூறுகிறது. மனிதனை மதத்தால் வேறுபடுத்துவது சிறந்ததல்ல. மதம் ஒருவனுக்கு வழிகாட்டியே தவிர அது கொலை காட்டியல்ல என்பதை மறந்து விடக்கூடாது.

இனங்களை ஐக்கியப்படுத்துவதற்கு மதங்கள் பங்களிக்க வேண்டும். மாறாக ஐயப்படுவதற்கு நாம் ஒர நாளும் சோரம் போகக் கூடாது. மொழயால ஒற்றிப்போன தமிழ் முஸ்லிம் மக்கள் மதத்தினால் மட்டுமே வேறுபடுகின்றனர். எனவே, மதங்களுக்கு ஊறு விளைவிக்க முனைய இரு தரப்பார்களும் முற்படாமல் தற்பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவோமயின் இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கக வேண்டிய தேவையும் அவசியமும் ஏற்படாது என்பது திண்ணம். அவரவர் மதத்திற்கு மதிப்பும், மரியாதையும் கொடுப்பது மட்டுமல்லாமல் அடுத்தவர் மத்திற்கும் உரிய மதிப்பும் மரியாதையும் கொடுப்பது இன்றியமையாததாகும். இவ்வாறான பண்புகள் சிறப்பாகப்பேணப்படும் போது பாரிய பிரச்சினைகளிலிருந்து எம்மை இலகுவில் விடுவித்துக் கொள்ள வழிகோலலாம்.

மனித குலத்தின் மதம் ஒரு சிறந்த முற்போக்குச் சிந்தையுடைய நல்வழிப் பதைகளுக்கு மட்டுமே பாவனைப் படுத்த வேண்டும். மாறாக மனித குலத்தையே குழைப்பதற்கு ஒரு காலமும் இதனைப் பயன்படுத்தலாகாது. மதத்தால் நாம் தமிழர், முஸ்லிம்கள் எனறு வேறுபட்டாலும் மொழயால் நாம் ஒன்று பட்டுள்ளோம். எனவே, இனிமேலாவது நாம் எமது மதத்தின் மேல் அன்பும், நம்பிக்கையும் வைத்திருப்பது போல் தமிழர், முஸ்லிம் என்ற உறவிலும் பிரியம் வைப்போமாக.


Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com